Saturday 24 December 2016

கர்ண பிசாசினி

கர்ண பிசாசினி என்னும் தேவதை யட்சணி வகையை சார்ந்ததுதான் கர்ண யட்சணி என்றும் ஒரு தேவதை உண்டு அந்த தேவதையும் முக்காலமும் காதில் வந்து பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் நினைத்த கேள்விகளுக்கான குறி சொல்லும் இந்த சப்தம் ஒரு வகையான கீச்சு குரலில் அமையும் .அந்த தேவதையை போலவே இந்த கர்ண பிசாசினி தேவதையும் குறி சொல்ல கூடியதுதான் .

மற்ற குறி சொல்லும் தேவதைகளுக்கும் இந்த தேவதைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மற்ற தேவதைகளை வைத்து குறி சொன்னால் உணர்ந்து சொல்ல வேண்டும் .இந்த தேவதைகள் அப்படி அல்ல .இந்த தேவதையானது காதில் வந்து பேசும் .முதலில் சித்தி செய்யும் போது காதில் ஒரு வகையான இரைச்சல் சப்தம் கேட்கும் அதற்கு பிறகு ஒரு காத்து சுத்தமாக கேட்காது .அதற்கு பிறகுதான் அந்த தேவதை பேசும் சப்தம் நம் காதுக்கு கேட்கும் .

இந்த மந்திரத்தை அகோரிகள்தான் பயன்படுத்துகிறார்கள் அதனால் இந்த உபாசனா செய்யும் பொது மிகவும் பாதுகாப்பு அவசியம் .

கர்ண பிசாசினிமூலமந்திரம் :

ஓம் ஹ்ரீம் சமன் சக்தி பகவதி கர்ண பிசாசினி 
சந்திர ரூபிணி வட் வட் சுவாகா 

இந்த மந்திரத்தை 125000 உருக்கள் ஏற்றி சித்தி செய்த பின்னர் அந்த தேவதை உங்களிடம் பேசும் .

No comments:

Post a Comment