Thursday 31 March 2016

கிரக பாதிப்புகள் நீங்க

உலக இயக்கங்கள் நவக்கிரகங்களினால் நடத்தப்படுகின்றன நம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் இடத்தின் அடிப்படையில் பலன்கள் நடக்கின்றன நல்ல இடத்தில கிரகங்கள் இருந்தால் நல்ல பலன்களும் அவ்வாறு இல்லாவிடில் தீயபலன்களும் உண்டாகும் .

நாம் எந்த தொழிலை செய்தாலும் கிரக அமைப்புகள் சரியாக இருக்க வேண்டும் .இல்லாவிட்டால் தொழிலை தொடங்குவதற்கு முன்பே இடையூறுகள் உண்டாகலாம் .தொடங்கிய பிறகும் பல பிரச்சனைகள் தோன்றலாம்

கிரக தோஷ நிவர்த்தி யந்திரம் 


மூலமந்திரம் 

ஓம் நமோ பகவதி ரக்தாக்ஷி 
ரத்த சாமுண்டி கட்கட மருகடங்க 
சூல தாரிணி வா வா ஹூம்பட் ஸ்வாகா 

மேற்கண்ட யந்திரத்தை செப்பு தகட்டில் வரைந்து யந்திர சுத்தி செய்து பூஜை செய்ய வேண்டும் .தினமும் 1008 வீதம் 11நாட்கள் பூஜை செய்து வந்தால் கிரகங்களினால் ஏ ற்படும் பாதிப்புகள் நீங்கி விடும் .பூஜை செய்யப்பட யந்திரங்கள் நம்மிடம் கிடைக்கும் 

வியாபார ஸ்தலங்களில் மனிதர்களை வசீகரிக்க

எந்த ஒரு வியாபாரத்திலும் பொருட்களை வாங்க வருபவர்களில் எண்ணிக்கையை பொறுத்தே வியாபாரம் பெருகும் .ஒரே பொருளை விற்கும் பல கடைகள் இருக்கலாம் எல்லோருக்கும் கூட்டம் சேருவதில்லை .ஒரு சிலர் சில நாட்களில் வியாபாரம் சிறிதும் நடக்காதநிலையில் கவலைப்படுவார்கள் இந்த நிலை நீடித்தால் கடையை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும்
மக்கள் நம் கடையில் பக்கம் கவர்ந்து இழுக்க வேண்டுமென்றால் அதற்கு முக ராசி வேண்டும் அந்த முக ராசி எப்படி வரும் ?

அதற்கு வழி வகுப்பவள் அன்னை வராகி அவளில் கடைக்கண் பார்வை பட்டால் போதும் மக்கள் நம் கடைக்கு பொருட்களை வாங்க வருவார்கள் .

வராகி யந்திரம் 

வராகி மூல மந்திரம் 

ஓம் ஐம் க்லீம் சௌம் சிவசம்பு வராகி வா வா ஹூம்பட் ஸ்வாகா . 

அதற்கு இந்த வராகி யந்திரம் செம்பு தகட்டிலே வரைந்து நாள் ஒன்றுக்கு 1008 உரு வீதம் 11நாட்கள்  பூஜை செய்து தாயத்தில் அடைத்து கட்டிகொண்டால் முக வசீகரம் உண்டாகும் .இல்லையென்றால் யந்திரம் பூஜை அறையில் வைத்தும் வழிபாடு செய்யலாம் நம்மிடம் பூஜை செய்து வைத்த தாயத்துகள் கிடைக்கும் .

Monday 28 March 2016

வாலை பரமேஸ்வரி யந்திரம் மந்திரம்

LESSON :7

            மாந்திரீக பாடங்களில் முதல் தெய்வமாக சித்தி செய்து கொள்ள வேண்டும் .இந்த வாலை பரமேஸ்வரியால் தான் உங்களது வாழ்வில் ஞான விளக்கேற்ற முடியும் .நீங்கள் இந்த தேவதையை 41விரதமிருந்து சித்தி செய்து கொண்டால் இந்த தெய்வத்தின் மூலமாக அநேக காரியங்கள் சாதிக்கலாம் .இதனால் பல மாந்திரீக உண்மைகள் தெரிய வரும் குறி சொல்லலாம் முக்காலமும் சொல்லும் ஞானம் கிடைக்கும் .ஆலய பிரசன்னம் பார்ப்பவர்கள் இந்த தெய்வம் சொல்வதை கேட்டுதான் சொல்வார்கள் . 

வாலை புவனேஸ்வரி  யந்திரம் 

மூலமந்திரம் 

அரி ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஸ்ரீயும் றீயும்
வா வா வாலை பரமேஸ்வரி வருக வருக 
வந்து என் நாவிலும் வாக்கிலும் வந்து முன் நிற்க சிவா.

பூஜை விதி :

              வளர்பிறை வெள்ளிகிழமை நாளில் யந்திரம் எழுதி பூஜையை துவங்க வேண்டும் .தினம் 108 உரு வீதம் 41 தினங்கள் விரதமிருந்து பூஜை செய்தால் சித்தியாகும் .

       இதனால் சகல காரியங்களையும் சாதிக்கலாம் சாதகனுக்கு தன வசியம் ,ஜனவசியம் அனைத்தும் சித்தியாகும் .

--------------------------------------------------------------------------------

Sunday 27 March 2016

மாந்திரீகருக்கு தேவையான பொருட்கள்

LESSON 6

மாந்திரீக கலை பயில்பவர்களிடம் மற்றும் மாந்திரீக கலை வல்லுனர்களிடம் ஒரு சில பொருட்கள் நிச்சயமாக நம்மிடம் வைத்து கொள்வது அவசியம் அதற்கான முயற்சிகளை துவங்குங்கள் என்னென்ன பொருட்கள் என்றால் ..


  • தேவதா வசிய அஞ்சனம் 
  • அஷ்டகர்ம அஞ்சனம் 
  • குறி சொல்ல அஞ்சனம் 
  • களவு புதையல் கண்டறிய அஞ்சனம் 
  • அகோர காளி உபாசகருக்கு தலைச்சன் பிள்ளை மண்டை ஓடு 
  • அம்பாள் உபாசகருக்கு இடம்புரி சங்கு 
  • அட்சரம் எழுதப்பட்ட ஆசன பலகை 
  • வாசிக்கோல் 
  • குறிசொல்ல கருங்காலி கோல் 
  • தேவதைகளை கண்டறிய தேவாங்கு கண் பீளை 
  • மாரண பேதன வேலைகளுக்கு தெய்வத்தை ஏவல் செய்ய கழுதை எலும்பு .
  • ஐங்கோல தைலம் 
  • ஐங்காயம் 
  • அனைத்து வகையான யந்திரத்தகடுகள் 
  • ஆருடம் 



மற்றும் நமது செல்வ வசீகரத்திற்க்காக  வேறு சில பொருட்கள் உபயோகப்படுத்தலாம் இதில் ஒரு சில பொருட்களை தவிர்த்து மற்றவை அனைத்தும் நம்மிடம் கிடைக்கும்  தொடர்புகொள்ளவும்

Saturday 26 March 2016

கணபதி சித்து

LESSON 5

எந்த ஒரு கலைகளுக்கும் முழு முதற்கடவுளாக விளங்குகிறவர் கணபதி ஆகையால் எந்த ஒரு சூழ்நிலையிலும் முழு முதற்கடவுளான கணபதி மந்திரத்தை கூறி முறையிட்டால் எந்த ஒரு பிரச்சனைகளும் நம்மை ஒன்றும் செய்யாது .

பஞ்சாட்சர கணபதி யந்த்ரம்  மந்திரம் 


மூல மந்திரம் 
வயநமசி வவ்வும் கணபதி வகார கணபதி 
யநமசிவ யவ்வும் கணபதி யகார கணபதி 
நமசிவய நவ்வும் கணபதி நகார கணபதி 
மசிவயந மவ்வும் கணபதி மகார கணபதி 
சிவயநம சிவ்வும் கணபதி சிகார கணபதி 
அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல 
சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகெல்லாம் 
உனது வசம் ஆனது போல எனது வசமாக சிவா .

பூஜை முறைகள்   

பஞ்சாட்சர கணபதி பூஜையை வளர்பிறை சமயத்தில் வெள்ளிகிழமை நாட்களில் பூஜை துவங்க வேண்டும் .பூஜையில் இந்த யந்திரத்தை அன்றைய தினம் குறு ஓரை அல்லது சுக்கிர ஓரை சமயம் பார்த்து மேற்கண்ட யந்திரத்தை எழுத வேண்டும் .எழுதி யந்திர சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .அதற்கு பிறகு யந்திரதிற்கு நைவேத்யங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும் ..

இந்த மந்திரத்தை 1008 தடவை விரதமிருந்து கூறிவந்தால் சித்தியாகும் .இதை சித்தி செய்தால் உடனடியாக உங்களை அனைவரும் உன்னைஎதிர்பார்த்து காத்திருப்பார்கள்; நம் கஷ்டங்களை போக்ககூஒடிய ஒரே மனிதன் நீங்கள்தான் என்று கூறுவதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
அவ்வளவு சக்தி வாய்ந்த யந்திர பிரயாக முறை இது ..

மாணவர்கள் உடனடியாக அதற்கான ஆயத்தம் ஆவது மிகவும் நல்லது எதேனும் காலம் கனியும் என்று காத்திருந்தால் ஒருநாளும் கனியாது ஆகையால் உடனடியாக சமுதாயத்தில் நம்மால் என்னென்ன செய்ய முடியுமோ செய்ய முயற்சி செய்வோம் .

என்னுடைய மாணவராக சேர்ந்த பிறகு உங்களுக்குரிய அனைத்து விசயங்களிலும் நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்

ஏதேனும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள அணுகவும் ..............  


Friday 25 March 2016

மாந்திரீக பூஜை முறை

LESSON 4



மாந்திரீகம் பயிலும் அனைவருக்கும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும் அது என்னவென்றால் நாம் செய்யும் பூஜைகள் சரிதானா இல்லை பூஜையில் எதாவது குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டதா என்று .அதற்காகத்தான் நாம் முறையாக என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் .

நான் மாந்திரீக பாடத்தை இப்படி வெளிப்படையாக கொடுப்பது எதற்கு என்றால் பொதுவாக தமிழ்நாட்டில் நிறையபேர்கள் மாந்திரீகம் என்ற பெயரிலே பலரை ஏமாற்றி வயிறு பிளைத்துகொண்டிருகிரார்கள் ஆகவே அவை அகல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாந்திரீகப்பாடம் இலவசமாக கொடுத்து வருகிறோம் .நாங்கள் பரம்பரை மாந்திரீகர்கள் அந்த காலத்திலேயே எனது தாத்தா கேரளாவில் சென்று பயின்றதை எனது தகப்பனார் அவரது வழியில் நானும் பின்பற்றி வருகிறேன் .இதனால் நான் பயின்ற பாடங்களில் ஓரளவு பாடங்களை ஒளிவு மறைவின்றி கற்று தருவேன்  .மாந்திரீகத்தில் ஒரு சில பாடங்கள் மட்டும் நான் தட்சனை வாங்குவேன் ஏனென்றால் குரு தட்சனை இல்லாமல் ஒரு சில வித்தைகள் சித்தியாகாது .அதன் காரணமாகத்தான் வாங்க வேண்டும் .
பூஜை முறை 

  • நாம் வணங்கும், தெய்வம் கிழக்கு நோக்கி வைக்கவேண்டும் 
  • நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும் 
  • குத்துவிளக்கு கன்னி மூலையில் வைக்க வேண்டும் 
  • நாம் இஷ்ட தெய்வமாக வாலை புவனேஸ்வரி தாயை எடுத்து கொள்ள வேண்டும் 
  • வாலை தெய்வத்தின் படம் வாங்கி வைக்க வேண்டும் 
  • அதன் முன் ஒரு பெரிய தம்பாளத்தட்டில் திருநீறு பரப்பி வைத்து கொள்ள வேண்டும் 
  • இன்னொரு தாம்பாளத்தட்டில் குங்குமம் பரப்பி வைக்க வேண்டும் 
  • அதற்கு முன் வாழையிலை போட்டு தாம்பூலம் வைத்து அதன் பிறகு வாழைப்பழம் படைத்து அவள் பொறி கடலை படைத்து பன்னீர் சந்தனம்,சூடம் சாம்பிராணி புகைக்க வேண்டும் 
  • நீங்கள் பூஜை செய்யும் யந்திரத்தை திருநீறு நிரப்பிய தாம்பாளத்தட்டில் வைத்து பூஜை செய்யலாம் 
  •  இந்த முறையின் படி பூஜை துவங்க வேண்டும் இன்னும் பல உள்ளன ஒருவர் வீட்டில் சென்று பூஜை செய்ய என்னென்ன முறைகள் சாந்தி கழிக்க என்னென்ன முறைகள் என்று பல முறைகள் உள்ளன .என்னுடன் இணைந்திருங்கள் நீங்கள் ஒரு சிறந்த மாந்த்ரிகனாக திகழ்ந்து சென்ற இடமெல்லாம் நற்பெயர் ஈட்டலாம் என்பது உறுதி .


ஏனென்றால் இப்போது உண்மையான மாந்திரீகர்கள் என்று சொல்லுமளவிற்கு யாருமே தென்படவில்லை தமிகத்தில் ஆகவே என்னிடம் பயிலும் நீங்களாவது நாலுபேருக்கு நல்லது செய்வீர்கள் என்று நம்புகிறேன் .

நல்ல மாந்திரீகருக்கு மாதம் பல லட்சங்கள் வரை வருமானம் வரும் அவ்வளவு வித்தைகள் உள்ளன .

உங்களுடைய சந்தேகங்களை என்னிடம் கேட்கலாம் .

மந்திரம் ஜெபிக்கும் முறை

LESSON 3


         
மந்திரம் ஜெபிக்கும் பொது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன ,அந்த விதிமுறையின் கீழ் சரியாக ஜெபித்தால் மட்டுமே தேவதா சித்தி உடனடியாக கிடைக்கும் .


  • வசியம் ஆகர்சனம் செய்ய மந்திரம் ஜெபித்தால் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் 
  • மோகனம் தம்பனம் செய்ய வடக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் 
  • உச்சாடனம் ,வித்வேடனம் செய்ய மேற்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் .
  • மாரணம் ,பேதனம் செய்ய தெற்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் .
  • மந்திர எழுத்துகளை முதலில் மனப்பாடம் செய்து அதன் பிறகு ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும் .
  • மந்திரம் மெதுவாக கூறினாலும் பரவாயில்லை தெளிவாக உச்சரிக்க வேண்டும் .
  • மந்திரம் உச்சரிக்கும் பொது உடலில் ஒரு சில மாற்றங்கள் நிகழும் அதை உணர வேண்டும் .
  • உடலில் மாற்றங்கள் ஏற்படுத்தாத மந்திரங்கள் சரியாக வேலை செய்யாது .
  • மந்திரம் ஜெபிக்க முதுகெலும்பு நிமிர்ந்து இருக்க வேண்டும் .
  • பத்மாசனத்தில் அமர்ந்து மந்திரம் ஜெபிக்க வேண்டும் .
  • தேவாத சித்தி செய்ய வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்க வேண்டும் 
  • எத்தனை முறை கூறியிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளவதற்காக 108,அல்லது 54 எண்ணிக்கையுள்ள மணி மாலை அல்லது புஷ்பங்கள் எடுத்து கொள்ளலாம் .

இது தவிர ஏதேனும் சந்தேகங்களை என்னிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் .எந்த ஒரு களையும் சந்தேகத்துடன் பிரயோகித்தால் அது வெற்றியடையாது .ஆகவே சந்தேகங்கள் முழுவதும் நிவர்த்தி செய்து கொண்டு நீங்கள் துவங்கலாம் .

யந்திரம் எழுதும் முறை

LESSON 2


             மாந்திரீக கலையில் நிச்சயமாக நாம் யந்திரம் எழுத கற்றுக்கொள்ள வேண்டும் யந்திர எழுத்துக்கள்தான் நமக்கும் நாம் வணங்கும் தெய்வத்திற்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்துகிறது .யந்திரம் இல்லாமல் மாந்திரீகம் இல்லை ஒரு சில மந்திரங்கள் மட்டும் யந்திரங்கள் இல்லாமல் செயல்படும் .

யந்திரங்கள் பல வடிவங்களில் கிடைக்கும் அதில்.... 


  • நாம் யந்திரங்கள் எழுதுவதற்கு முன்பே சரியான அளவில் யந்திரத்தை வெட்டி வைத்து கொள்ள வேண்டும் .
  • யந்திரம் எழுதிய பிறகு எக்காரணம் கொண்டும் வெட்டவோ கிழிக்கவோ கூடாது 
  • யந்திரம் எழுத செம்பு கம்பியை எழுத்தாணி போன்று கூர்மையாக உருவாக்கி பயன்படுத்த வேண்டும் 
  • யந்திரங்கள் எதற்காக எழுதுகிறோமோ அதற்கான உலோகம் எது அதற்கான திசை அறிந்து பட்சி  ஹோரை நேரங்கள் சரியாக பார்த்து யந்திரங்கள் எழுத ஆரம்பிக்க வேண்டும் .
  • யந்திரங்கள் செம்பு ,பித்தளை, காரியம் ,இரும்பு ,பனை ஓலை ,தங்கம் ,ஐம்பொன் ,வெள்ளி ,போன்ற உலோகங்களில் எழுதலாம் .
  • யந்திரம் எழுதிய பிறகு விளக்கு ஒளியில் கூர்மையாக வைத்து பார்க்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் யந்திரத்தில் ஓட்டையோ கிழிசலோ விழக்கூடாது .
  • எந்த ஒரு காரியத்திற்கும் யந்திரத்தை முன் கூட்டியே எழுதி வைக்க கூடாது .என்ன விசயத்திற்காக நாம் யந்திரம் எழுதுகிறோமோ அதை உணந்து மனதில் வைத்து யந்திரம் எழுத வேண்டும் .
  • யந்திரங்களில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அல்லது ஓட்டை விழுந்தால் அந்த யந்திரத்தை ஓடும் நீரில் அல்லது கடலில் போட்டு விட வேண்டும் .

இனி பின்வரும் பாடங்களில் யந்திரம் எழுத என்ன மந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் ,சாபநிவர்த்தி செய்வது எப்படி என்று விபரமாக குறிப்பிடுகிறேன் .

Wednesday 23 March 2016

மாந்திரீகம் பயில அடிப்படை பயிற்சி

LESSON 1
மந்திர சக்தி பெற 



  1. குருவில்லாத வித்தை பாழ் 
  2. நாம் படிக்கும் இக்கலையை சொல்லி தரும் குருவை மதித்து நடக்க வேண்டும் 
  3. குருவை வணங்கி  ஒவ்வொரு காரியத்தையும் செயல் படுத்த வேண்டும் 
  4. தெய்வத்தின் மேல் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும்.
  5. தினமும் அதிகாலையில் எழுந்திருக்க முயற்சி செய்ய வேண்டும் 
  6. தினமும் ஒரு மணி நேரமாவது இஸ்ட தேவதையின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் .
  7. நீங்கள் என்னை குருவாக ஏற்றுகொண்டால் நான் வணங்கும் தெய்வத்தையே உங்கள்  இஸ்ட தெய்வமாக ஏற்று கொள்ளலாம் .
  8. தினமும் தியானம் யோகம் போன்ற கலைகளை பயின்றால் மாந்திரீகத்திற்கு மிகவும் நல்லதாக இருக்கும் ,
  9. குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது குல தெய்வத்தை தெரிந்திருக்க வேண்டும் 
  10. மூலிகை பற்றிய அறிவு வேண்டும் 
  11. இரவில் பல இடங்களுக்கு தனியாக செல்லவேண்டிய சூழல் ஏற்படும் அதனால் பயத்தை தவிர்க்க வேண்டும் 
  12. பணத்தின் மேல் ஆசை இல்லாமல் இருந்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் 
  13. விரத நேரங்களில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் 
  14. மந்திரங்களை முதலில் மனதில் பதிய வைத்து விட்டு ஒவ்வொரு பூஜையையும் துவங்க வேண்டும்