Saturday 15 July 2017

எங்களுடைய பயிற்சி புத்தகங்கள்

வாசக பெருமக்களே ,

நம்மிடம் முத்துபாண்டி வைத்தியரின் அனுபவத்தில் உள்ள அனைத்து விசயங்களும் பயிற்சி புத்தகமாக வெளியிடுகின்றோம் .அவருடைய பழைய ஏட்டு பிரதியிலிருந்து உள்ள மந்திர தந்திர சாஸ்திரத்தை அவர் பயன்படுத்திய வித்தை அழியாமல் பாதுகாக்கும் விதமாக உலகத்தார் அனைவரும் அறியும் வண்ணமாக கொடுத்திருக்கிறோம் .

இந்த பயிற்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் உங்கள் வாழ்வில் இதில் ஏதேனும் பயிற்சி எடுத்துகொண்டு பல நன்மைகள் உலகத்தாருக்கு உங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்யலாம் .

எங்களுடைய பயிற்சி புத்தகங்கள் ,

முத்துபாண்டி வைத்தியரின்    மாந்திரீக அனுபவங்கள் (அனுபவ நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    மாந்திரீக அரிச்சுவடி    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    மூலிகை வித்தை     (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    பஞ்சபட்சி சாஸ்திரம்    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சாமக்கோள் ஆரூடம்    (பயிற்சி நூல் )
முத்துபாண்டி வைத்தியரின்    மெஸ்மெரிசம்&ஹிப்னாடிசம் (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    ஜோதிட சாஸ்திரம்      (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சரகலை சாஸ்திரம்      (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சித்த வைத்திய சாஸ்திரம்  (அனுபவ நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    தேவதை,ஆவி,பேய்களோடு (அனுபவ நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    தியானம் முதல்படி      (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    அருள்வாக்கு குறிசொல்ல(பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    யட்சணி மாந்திரீகம்     (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சுடலைமாடன் சித்து    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    பகவதி சித்து          (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    அங்காளபரமேஸ்வரி சித்து (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    காளி சித்து           (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    இசக்கியம்மன் சித்து    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    கருப்ப சாமி சித்து      (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    அஷ்டபைரவர் சித்து    (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    அனுமன் சித்து        (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    பேச்சியம்மன் சித்து     (பயிற்சி நூல்)
முத்துபாண்டி வைத்தியரின்    சித்தர்கள் மாந்திரீகம்    (பயிற்சி நூல்)
செல்வவளம் தரும் யந்திரங்கள் மந்திரங்கள்
வியாபார வசிய யந்திரங்கள் மந்திரங்கள்
மூலிகை படங்கள் 1008 பெயர்களுடன்  (10 பாகம் )
தொழில் வசிய யந்திரங்கள் மந்திரங்கள்
நவக்கிரக யந்திரங்கள் மந்திரங்கள்

ஆண் பெண் வசிய யந்திரங்கள் மந்திரங்கள் 

லஷ்மி கடாட்சம் செல்வ வரத்து உண்டாகும் ஆன்மீக குறிப்புகள்

லஷ்மி கடாட்சம் செல்வ வரத்து உண்டாகும் ஆன்மீக குறிப்புகள்

               வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
               வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
               வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
               நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
               அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
               வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்
               பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
               வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பணபுழக்கம் அதிகரிக்கும்.
               அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்
               யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
               பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
               முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
               வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
               பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
               பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
               பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனைதீரும்.
               தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
               குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
               தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வபுண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
               அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
               குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
               தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
               மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
               அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
               வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
               ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
               ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
               தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ணஆகர்ஷணமாகும்.
               மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
               ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
               சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
               வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
               மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
               சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
               சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
               சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
               பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
               வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
               மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
               ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
               தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
               தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
               சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
               குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
               குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
               திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
               துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
               சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
               செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
               ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
               கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
               சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
               ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
               வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
               ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
               தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
               ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
               கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
               வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
               மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
               கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
               பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.
               செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
               தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
               இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
               வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
               வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
               செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
               கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
               அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
               அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
               திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
               தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
               சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
               சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
               ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
               ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
               தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
               பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
               ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.

               வியாழக்கிழமை குபேர காலத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேரனை வழிபட பணம் வரும்.

ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்

லஷ்மி கடாட்சம் செல்வ வரத்து உண்டாகும் ஆன்மீக குறிப்புகள் 

ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்

சொத்து பணம் பற்றிய குடும்ப பிரச்சனைகளை களையும் ஸ்ரீ பத்மாவதிதாயார் மந்திரம்

ஓம் நமோ பத்மாவதி 
பத்ம நேத்ர வஜ்ர வஜ் 
ராம் குஷ ப்ரத்யக்ஷம் பவதி’.

குடும்பத்தில் சொத்து மற்றும் பணம் சம்மந்தமாக ஏற்படும்பிரச்சனைகளுக்கும் அமைதியின்மைக்கும், மேலும் குடும்பஉறுப்பினர்களிடையே சொத்து சம்மந்தமான தகராறு மற்றும் வாக்குவாதங்களுக்கும் கருத்து வேற்றுமைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாகஅமையக் கூடிய ஒரு திருமந்திரம் ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்ஆகும்.

இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைஅன்று, இரவு 9 மணிக்குமேல் பத்மாவதி தாயாரின் திருவுருவப் படத்தின்முன்பு நெய் தீபமேற்றி 108 முறை சொல்லி தாயாரை வணங்கவேண்டும். அன்று முதல் தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு இரவில்இம்மந்திரத்தை சொல்லி தாயாரை வணங்க மேற்சொன்னபடி பணம்சொத்து சம்மந்தமாக குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அமைதிநிலவும்.


இது ஸாத்வீக தேவதா மந்திரம் ஆதலால், பத்மாவதி தாயாருக்கு பூஜைசெய்யும் இந்த 48 நாட்களில் அசைவ உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.அதே போல், தினமும் மாலை குளித்து முடித்த பிறகே பூஜையில் அமரவேண்டும்.

மூலிகை வித்தைகள்

மூலிகை வித்தைகள்

உலகத்தில் உள்ள ஒவ்வொரு மூலிகைகளுக்கும் சாபம் உண்டு ,அதைப்போல ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு.மனிதன் தன்னுடைய தன்மையை குணத்தை அடிக்கடி மாற்றி கொண்டே இருப்பான் அவனால் ஒரு சரியான தன்மையால் இருக்க முடியாது .அப்படி ஒரே தன்மையோடு இருந்து விட்டான்ஆனால் அவன் பக்குவமடைந்த மனிதனாக மாறிவிடுகிறான் .மூலிகைகள் தன்னுடைய குணத்தை எப்பொழுதும் மாற்றுவதில்லை .

அதனால் தான் மனிதனால் ஆகாத காரியங்கள் கூட மூலிகை வைத்து செய்தால் எளிதில் வெற்றியடையலாம்  மூலிகையை காப்புக்கட்டி எடுப்பதனால் அதன் உயிர் அதன் வேரிலே தங்கி அதனுடைய தன்மையை வெளிக்காட்டுகிறது .

அக்காலத்தில் எந்த மூலிகை என்ன செய்யும் என்று ஆராய்ந்து பார்த்து அதற்கான மூலிகையை வைத்து பல காரியங்கள் செய்தார்கள் .அதுதான் மூலிகை வித்தைகள் ,மை வித்தைகள் ,யந்திரங்களோடு மூலிகை வேறை பயன்படுத்து காரியமாற்றுதல், வெறும் மூலிகை யிலே மந்திர உரு ஏற்றி மோதிரம் அல்லது தாயத்து கட்டுதல் என்று பல சூட்சமமான விசயங்கள் இந்த இந்த மூலிகை வித்தையில் உள்ளது 

வெறும் மூலிகையில் உருவேற்றும் பொது அதில் மந்திர உருக்கள் தங்க வேண்டுமானால் அதற்கு அஷ்ட கர்மங்களுக்கும் ஒவ்வொரு வகை நூல் உள்ளன அந்த நூல்களை சுற்ற வேண்டும் ஜெபிக்கும் பொது சுற்றிகொண்டே ஜெபிக்க வேண்டும் அப்படி ஜெபித்தால் நாம் ஏற்றிய மந்திரங்கள் அந்த நூலிலேயே தங்கி நல்ல பலனை நமக்கு அழிக்கிறது .


நான் திரு முத்து பாண்டி வைத்தியர் என் தாத்தாவின் உதவியோடு மிகவும் ஸ்டைலாக ஆக கையில் அணிய மோதிரம் கயிறுகள் கழுத்தில் அணிய தாயத்து தயாரித்து உபயோகிக்கிறேன் .அதனால் வெளியில் சென்றால் நல்ல மரியாதையும் நான் பேசுவதை சபையில் எல்லோரும் கேட்பார்கள் என்னை சுற்றி எப்போதும் பத்து பேர்கள் இருப்பார்கள் அவ்வளவு வசீகரம் அந்த பொருட்களுக்கு பெண்களும் நல்ல மரியாதையும் கொடுப்பார்கள் .

வசிய ஜால வித்தை,தேவதை சித்தி

வசிய ஜால வித்தை

மலை பிரதேசத்திற்கு சென்றால் தேவாங்கு கிடைக்கும் அங்கு சென்று ஒரு ஆண் தேவாங்கும் பெண் தேவாங்கும் பிடித்து வந்து 40 நாட்கள் வளர்த்து 40 நாளாகிய அன்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு புதிய பாண்டத்திலிட்டு ஓர் ஆற்றங்கரைக்கு சென்று இரண்டு பக்கங்களிலும் தனித்தனியாக காளி தியானம் 108 செய்து தேவாங்கை உயிருடன் தனித்தனியாக பாண்டத்தில் வைத்து  புதைத்து வைக்க வேண்டும் .

பின்பு 40 நாட்கள் கழித்து சென்று ஆண் தேவாங்கு புதைத்து வைத்த இடத்தை தோண்டி பார்த்தால் பெண் தேவாங்கும் அந்த குழியில் உள்ள பாண்டத்தில் வந்து விடும் இப்படி அகப்பட்ட தேவாங்கை எடுத்து காளிக்கு பலி கொடுக்க வேண்டும் 

அதன் பிறகு இந்த பலி கொடுத்த தேவாங்கிலிருந்து குழித்தைலம் இறக்கி அதை ஒரு சிமிழில் பதனம் செய்து வைத்து கொள்ள வேண்டும் மேற்படி தைலத்தை நெற்றியில் திலர்த மிட்டு சென்றால் நீங்கள் எதை வசியம் செய்ய விரும்புகிறீர்களோ அவற்றை வசியம் செய்யலாம் இதனால் மனித வசியம், பெண் வசியம் ,தேவ வசியம் ,சர்வ வசியம் லோக வசியம் என்ற வசிய வகைகள் அனைத்தும் சித்திக்கும் .

தேவதை சித்தி

சிறு தெய்வங்களை சித்தி செய்வதை விட்டு விட்டு பெரிய தெய்வங்களான வாலை திரிபுரசுந்தரி ,காளி ,அஷ்ட லக்ஷ்மி ,விநாயகர்,அனுமன்,வராகி.இப்படி போன்ற தெய்வங்களை சித்தி செய்து வைத்து கொண்டால் நாம் ஒரு விஷயம் செய்யும் பொது அதற்காக அதிகம் முயற்சி செய்ய வேண்டியதில்லை 

நாம் பூஜையில் அமர்ந்திருக்கும் பொது இன்னான் மகன் இன்னனுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் போதும் அந்த நிகழ்வானது ஏழு அல்லது பதினோரு நாட்களுக்குள் நடந்து விடும் .அதற்காக எந்திரங்கள் எழுதி 41 நாட்கள் பூஜை வைத்து செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. இதில் முக்கியமானது என்ன வென்றால் நாம் வணங்கும் தெய்வத்தை இப்படிபட்ட வேலைக்கெல்லாம் பயன்படுத்தினால் நமக்குத்தான் பாவங்கள் அதிகம் ஆகும் . அந்த தெய்வத்திற்கு ஒரு லக்ஷ்திற்கு பத்து லக்ஷம் மந்திரம் கூறினால் நமக்கு எல்லா பிறவிகளிலும் அந்த தேவதையின் அருள் கிடைக்கும்.  இந்த தேவதைகளின் உபாசனை செய்யும் பொது அந்த தேவதையை நமக்கு வேலைக்காரனாக நினைத்தல் கூடாது .நம் குடும்பத்தில் ஓர் அங்கம் என்றே எண்ண வேண்டும் .


குறி சொல்ல மையும் கர்ண எட்சணி தியானம்

குறி சொல்ல மையும் கர்ண எட்சணி தியானம்

மை செய்யும் முறை :

சிறிய நங்கை 
பெரியநங்கை 
அழுகண்ணி ஆனைவணங்கி 
ஆடை ஒட்டி 

இந்த மூலிகைகளுக்கு முறையாக சாப நிவர்த்தி செய்து காப்புக்கட்டி பிடுங்கி வந்து அதன்பின் 

சந்தனம்
ஆந்தை பித்து 
வெள்ளை கெவுளி பித்தும்
இவையெல்லாம் ஒன்றாய் சேர்த்து காரம்பசுவின் பால் விட்டரைத்து குன்றி மணி அளவிற்கு ஒவ்வொரு குளிகை செய்து நிழலில் உலர்த்தி செப்பு சிமிளிற்குள் வைத்து .கர்ண எட்சணி தியானம் ஓத நடந்த நடக்கிற நிகழ்வுகள் அனைத்தயும் மற்றவர்கள் ஆச்சரியப்படும் படி தெளிவாக கூற முடியும் 

மேற்குறிப்பிட்ட குளிகையை தண்ணீரில் நனைத்து அதை நெற்றியில் திலகமிட்டு குறிசொல்ல வேண்டும் 

கர்ண எட்சணி தியானம் :

அரி ஓம் அங் மங் வங் கர்ண எட்சணி வா வா
வந்து குரிசொல்லம்மா வந்து என் முன் நில் .


இதற்கான யந்திரம் எழுதி சித்தி செய்து கொண்டால் அனைத்து குறிகளும் வெட்ட வெளிச்சமாக பளிச்சென்று கூற முடியும்,.