Friday 29 April 2016

வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள்



கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை  மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.

இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக் கின்றனர். காலையில் கடை திறந்ததும் இம்மந்திரத்தை 1008 முறை  ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.

அல்லது மாலை 6:15 முதல்  7:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை, தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.  

மந்திரம் 

ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய 
பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக 
சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா ||

செய்வினை நீங்க பரிகாரம்


செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?

பல காரணங்களால் வீடுகளில் துர்சக்திகள் புகுந்துவிடுகின்றன.

1. தெய்வக்குற்றம் (கடவுளுக்கு நாம் செய்யும் அபவாதம்)

2. பிதிர் குற்றம் (பிதிர்களுக்கு நாம் செய்யும் அபவாதம்)

3. செய்வினை சூனியம்

கோவில்களுக்கு போகும் பக்தர்கள் தெய்வநிந்தனை செய்வதாலும், ஆலயங்களுக்குள் செய்யத்தகாத வியங்களைச் செய்வதாலும் தெய்வக்குற்றம் ஆகிவிடுகிறது.

இறந்த ஆத்மாக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல் உதாசீனம் செய்யும் போது அது பிதிர்க்குற்றம் ஆகிவிடுகிறது. தெய்வக்குற்றம், பிதிர்க்குற்றம் ஏற்படும்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் தாமாக இலகுவில் புகுந்துவிடும்.

அதைவிட செய்வினை சூனியம் மூலமாக தீயசக்திகளை பிறர் ஏவிவிட வைக்கின்றனர்.

தீயசக்திகள் வீட்டில் புகுந்தால் அதற்கான அறிகுறிகள் எவை?

- வீட்டில் உள்ள நிம்மதி இல்லாமல் போகும்

- எதிர்பாராத நோய்கள் உருவாகும்

- வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும் பல விடயங்கள் நடக்கும்

- பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்

-கடவுளில் நம்பிக்கை குறையும்

-விவாகரத்துக்களை உண்டாக்கும்

-குடும்பப்பிரச்சனைகளை ஏற்படுத்தும்

தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன?

 45 தினங்கள் வைரவப் பெருமானுக்கு :-

வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு தினமும் வழிபடவேண்டும். இந்த 45 தினமும் வீட்டில் மச்சம் மாமிசம் கொண்டுவரவே கூடாது. (மச்சம் மாமிசம் ஆகியவை தீயசக்திகளின் பலத்தை அதிகரித்துவிடும்). தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்ட வேண்டும். காலை சூரியன் உதயநேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமன நேரத்தி்லும் இதை தொடர்ந்து செய்யவேண்டும். 45 தினங்களில் மீண்டும் உள்ளே புக முடியாவிடின் தீயசக்திகள் உள்நுழைய முடியாது.

45 தினங்களுக்கு பிறகு துர்ககையின் ஆலயம் சென்று, தீர்த்தம் பெற்று வீட்டில் தெளித்துவிடுங்கள். துர்க்கைக்கு அர்ச்சித்த குங்குமம் பெற்று, வீட்டு வாசலில் சூலம் கீறிவிடுங்கள்.

அதன் பின்னர், செய்வினை , சூனியம் வைத்த இடங்கள் தாமாக உங்கள் கண்ணுக்கு புலனாகும் சந்தர்ப்பம் ஏற்படும்.

வெள்ளைக் கடுகுச் செடிகள் இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்.

விநாயகர் கண் திருஷ்டி யந்திரம்

கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள் .கண்திருஷ்டி என்பது ஒரு மனிதனின் வாழ்வில் பல தடைகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது .திருஷ்டி தோஷத்தால் வியாபாரத்தில் நஷ்டம் ,வேலையில்லாமை ,வேலை செய்ய பிடிக்காத நிலைமை ஒரு சில நேரங்களில் வாகன விபத்துகள் ஏற்படுத்தும் ஒரு சில நேரங்களில் மனிதனின் உயிரையே எடுக்கும் ஒரு ஆயுதமாக இந்த திருஷ்டி செயல்படுகின்றது


அதற்கு இந்த யந்திரத்தை வளர்பிறை சதுர்த்தி நாளன்று எழுதி அதற்கு சாப நிவர்த்திகள் செய்து அவள் பொறி கடலை தேங்காய் பழம் பத்தி சூடம் படையல்கள் படைத்து மூல மந்திரத்தை 1008 தடவை ஜெபித்து அதை பிரேம் செய்து வீட்டு வாயில் மேல் தொங்க விட்டால் உங்களுக்குரிய அனைத்து கண்திருஷ்டி பிரச்சனைகளும் நீங்கி விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும்

மூலமந்திரம் :

ஓம் ஸ்ரீம் கம் கணபதியே மம 
க்ரஹ திருஷ்டி தோஷம் 
நிவர்தய நிவர்தய சுவாகா 

Thursday 28 April 2016

பெண் வசியம் செய்யும் வித்தை



ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அந்த கணவன் தன மனைவியை தனது விருப்பப்படி  நடந்தால் குடும்பம் நன்றாக அமையும் அதற்கான வித்தையை கூறுகிறேன் .

வளர்பிறை வெள்ளிகிழமை நாளன்று இரவு 10 மணிக்கு மேல் நிர்வாணமாய் நின்று கீழா நெல்லி செடிக்கு சாபநிவர்த்தி செய்து படையல் போட்டு மஞ்சள் நூல் காப்புக்கட்டி தீப தூபம் காட்டி பின்னர் அடுத்த வாரம் வெள்ளிகிழமை சூர்யஉதயத்திற்கு முன்பு கீழா நெல்லி வேரை பிடுங்கி வேரை எடுத்து மோகினி மந்திரம் சொல்லி நூல் சுற்றி பின்னர் அதற்கு ஐங்காயம் தடவி தாயத்தில் அடைத்து கட்டி கொண்டால் பெண் வசியம் ஆகும் .

மந்திரம் 

ஓம் க்ரீம் நமோ பகவதி சர்வஜன மனோகரி 
ஸ்திரி புருஷ வசங்கரி க்லீம் க்லீம் மமவசம் 
குரு குரு சுவாகா . 

Sunday 17 April 2016

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க


அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள்

மந்திரம் 

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய 
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச 
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ 
பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா  

இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும். உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு "ஹ்ராம்" என்று எழுதி   இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச் சுருட்டித் தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத, ப்ரேத, பிசாசு, துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.

தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு, கடை, தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு, கடை, தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்.

தீப அஞ்சனம் மந்திரம்


ஏதாவது ஒரு அமாவாசை அன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.



நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும். 108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும். வாயாலும் சொல்லலாம்.

மூல மந்திரம் 

’ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி 
தீபிகா ஜோதி சொரூபணி 
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா’ 

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடியும். இதனால் களவு கண்டுபிடிக்கலாம் ,குறி சொல்லலாம் முக்காலமும் நீங்கள் தீபத்தில் பார்த்து சொல்லலாம் இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்

Tuesday 12 April 2016

குல தெய்வத்தை வசியம் செய்யும் முறை


குல தெய்வம் வசியம் செய்ய ஒரு பௌர்ணமி நாளில் கரு மஞ்சள் செடிக்கு காப்பு கட்டி அந்த மஞ்சளை எடுத்து அரைத்து அதனுடன் ...

ஜவ்வாது 
அத்தர் 
அரகஜா 
புனுகு 
ஜாதிக்காய் 
ஜாதி பத்திரி 
வெட்டிவேர் 
பச்சை கற்பூரம் 

அதனுடன் சித்தாமணக்கு எண்ணெய் விட்டு பதம் வரும் வரைக்கும் நன்றாக   2 ஜாமம் வரைக்கும்  அரைக்க வேண்டும்



இந்த மையை காந்தம் ஒட்டாத டப்பியில் பதனம் செய்து வைக்க வேண்டும் பூஜையின் போது குல தெய்வத்திற்கு ஒரு வாழை இலை போட்டு அதன் மேல் ஒரு செப்பு தகடு வைத்து அதன் மேல் கருப்பு மஞ்சள் மூன்று எடுத்து வைத்து அதில் மேற்கண்ட அஞ்சனத்தை மஞ்சள் மேல் தடவி பூஜைக்கு தேவையான படையலை படைத்து கொண்டு மந்திரம் ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும் .
குல தெய்வ வசிய  மந்திரம்

ஓம் ஸ்ரீம் அம்  உம் வம் லம் சிங் 
ஐயும் கிலியும் சவ்வும் ஜம் ஜம் 
பம் யம் ரம் மஹா (குலதெய்வத்தின் பெயர் ) 
சர்வ தனமே சர்வ ஜனமே வா வா வசி வசி ஹூம்பட் நமக .

குல தெய்வம் வசியம் செய்ய ஞாயிற்றுக்கிழமை உகந்தது இதற்கு யந்திரங்கள் எதுவும் கிடையாது இந்த கருமஞ்சள் மற்றும் மேற்கண்ட அஞ்சனம் போதுமானது இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் நெடுநாட்களாக நினைத்த காரியங்கள் நடக்காமல் தடைபட்டு வந்தால் குல தெய்வத்தின் அருளால் சகலமும் தடைகள் விலகி நல்ல வாழ்க்கை அமையும்

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள்.  அவ்வாறு செய்வது தவறில்லை.  அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.  அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும்.  இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.  மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.  மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு.  அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

மேற்கண்ட அஞ்சனம் ,மற்றும் கருமஞ்சள் நம்முடைய நிலையத்தில் கிடைக்கும்   

Friday 8 April 2016

அஷ்ட கர்மங்கள்



1. வசியம்
2. மோகனம்
3. உச்சாடனம்
4. ஸ்தம்பனம்
5. ஆகர்ஷனம்
6. வித்துவேடனம்
7. பேதனம்
8. மாரணம்            என்பது ஆகும்

இந்த அஷ்ட கர்மாக்களின் சக்தி மிகுந்த செயல்பாடுகள் என்னென்று பார்ப்போம் .

1. வசியம் என்றால், ஆகர்ஷனம் , மோகனம் , வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும்.
ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது – மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.

2. மோகனம் என்றால், மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.

3. உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .

4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம். 

5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.  

6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை , தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள் , தீய பழக்கங்கள் போன்றவை )

7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது .
அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது தொழில் எனப்படுகிறது

மூலிகை சாப நிவர்த்தி

பொதுவாக மாந்திரீகத்தில் 95 % வித்தைகள் மூலிகையை முன்னிலை படுத்தியே வருகிறது .இந்த வித்தையை சரியாக உணர்ந்து கொண்டால் அவனை இந்த வையகத்தில் எவராலும் ஜெயிக்க முடியாது .


இந்த வித்தையை அறிந்தவர்களுக்கு நிச்சயமாக பஞ்ச பட்சி சாஸ்திரமும் அறிந்திருக்க வேண்டும் ,ஏனென்றால் மூலிகைகளுக்கு உயிர் உண்டு அந்த மூலிகைகளுக்கு முறையாக சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கினால் அந்த சாபமானது நம்மை தாக்கும் என்பதில் ஐயமில்லை .



அதற்காக மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை பார்ப்போம்  

எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே மஞ்சள் நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும் .

தேவையானவை :

முனை முறியாத மஞ்சள் 
நூல் 
மஞ்சள் போடி 
பத்தி 
சூடகம் 
சாம்பிராணி 
வாழைபழம் 
வெற்றிலை 
பாக்கு 
நைவேத்தியம் 

இவைகளை அந்த மூலிகையின் முன் படைத்து அதற்கு கீழ் கண்ட மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் :

ஆனைமுகனை அனுதினம் மறவேன் 
அகத்தியர் சாபம் நசி நசி 
சித்தர்கள் சாபம் நசி நசி 
தேவர்கள் சாபம் நசி நசி 
மூவர்கள் சாபம் நசி நசி 
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி 

 என்று மூன்று தடவை விபூதி கையில் எடுத்து வைத்து கொண்டு கூறி மூலிகை மேல்போட மூலிகை சாபநிவர்த்தி பெறும்  அதன் பின் மஞ்சள் நூல் காப்புக்கட்டி முலிகை பிடுங்க வேண்டும் பிடுங்கிய மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் ஜெபிக்க வேண்டும்

மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் :

ஓம் மூலி மஹா மூலி ஜீவ மூலி 
உன் உயிர் உன் உடலில் நிலைத்து நிற்க சிவா 

என்று மூன்று தடவை மந்திரம் ஜெபித்து கொஞ்சம் விபூதியும் அருகம்பில்லும் மூலிகை மேல் போடா மூலிகை உயிருடன் இருந்து பலன் கொடுக்கும் .

இந்த முறையில் மூலிகை பிடுங்கி அதற்குரிய யந்திரத்தை எழுதி பிரயோகம் செய்தால் மட்டுமே அது முளிமையான பலன் கொடுக்கும் .இல்லை என்றால் 100% பலன்  முடியாது .

மூலிகை வித்தைகள் :

பஞ்ச பட்சி மூலிகை வித்தை 
• ஜல ஸ்தம்பன மூலிகை 
• சுக்கில ஸ்தம்பன மூலிகை 
• சர்ப்ப ஸ்தம்பன மூலிகை 
• தெய்வ ஆகர்சன மூலிகை 
• ஸ்திரி ஆகர்சன மூலிகை 
• மிருக வித்வேஷன மூலிகை 
• விஷ மாரண மூலிகை 
• பூத பிசாசு மாரண மூலிகை 
• சொர்ண வசிய மூலிகை 
• தேவதை வசிய மூலிகை 
• அக்கினி ஸ்தம்பன மூலிகை 
• பூத உச்சாடன மூலிகை 
• சத்ரு பேதன மூலிகை 

இப்படி இன்னும் பல மூலிகை வித்தைகள் உள்ளன

Wednesday 6 April 2016

தேவதா வசிய அஞ்சனம் செய்முறை


தேவதா வசிய அஞ்சனம் என்றால் எந்த ஒரு தேவதையை சித்தி செய்ய வேண்டுமென்றால் பல நாட்கள் எடுக்கலாம் அதை விரைவில் சித்தி செய்து கொள்வதற்காக இந்த தேவதா வசிய மையை தன பெருவிரலினால் எடுத்து நாம் வரைந்திருக்கும்  யந்திரத்தின் மேல் மற்றும் நம் நெற்றியில் தொட்டு வைத்து பின்பு உருவேற்றினால் சீக்கிரம் நாம் வணங்கும் தேவதை சித்தியாகும் .இது அனைத்து தெய்வங்களுக்கும் பொருந்தும் இதைதான் பலர் கோயில் சிலைக்கு அடியில் யந்திரத்தை வைத்து அதற்கு மேல் இந்த தேவதா வசிய அஞ்சனம் வைத்து பிரதிஷ்டை செய்கிறார்கள் .அந்த மை செய்முறையை கிழே பார்க்கலாம் .


மூலபொருட்கள் :

சந்தன வேர் 
வெண் குன்றிமணி வேர் 
புன்னை வேர் 
சிருமுன்னைவேர் 
பேய்தும்பை வேர் 
தொட்டார்சுருங்கி வேர்
வெள்ளெருக்கன் வேர் 

இவைகளை முறையாக காப்புக்கட்டி சாப நிவர்த்தி செய்து உலர்த்தி தீயில் கருக்கி எடுத்து பொடியாக்கி அதனுடன் சித்தாமணக்கு எண்ணெய் விட்டு இரண்டு ஜாமம் அரைக்க வேண்டும் .இதை அரைக்கும் போது

மூலமந்திரம் 

ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் சர்வ ஜீவதயாபரி பராசக்தி திரிமூர்த்தி ஸ்வரூபி மமவசம் ஆகர்சய ஆகர்சய சுவாகா .

இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே அரைக்க வேண்டும் அதன் பின்னர் ..

பச்சை கற்பூரம் 
புனுகு 
கோரசனை 
குங்கும பூ 
கஸ்தூரி 

கலந்து அரைத்து சிமிழில் பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும் பின்னர் மேற்கண்ட மந்திரத்தை 3 நாட்கள் 1008 உருக்கள் வீதம் ஜெபிக்க மை சித்தியாகி வேலை செய்யும் இந்த மையை நெற்றியில் கொஞ்சம் இட்டுக்கொண்டு ஜெபம் செய்தால் நாம் நினைத்த தேவதை உடனே வசமாகி பிரசன்னமாகும் .யந்திரத்தில் ஒரு பேரு விரல் அளவில் போட்டு வைத்து ஜெபித்தால் உடனடியாக தேவதா வசம் ஆகும் .இந்த அஞ்சனம் நம்மிடம் கிடைக்கும் தேவைக்கு அணுகவும் 

மோகினி வசிய மந்திரம்

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ ....

கணவன் மனைவி ,சண்டை சச்சரவுகள் நீங்க மோகினி மந்திர உபாசனை பெரிதும் துணை புரியும் .காதல் கை கூட ,நினைத்த வரன் அமைய ,நினைத்த பெண்ணை திருமணம் செய்ய இந்த மோகினி மந்திரம் உதவி செய்யும் .

 மோகினி வசிய யந்திரம் :



மூலமந்திரம் :

ஓம் சிவயநம கிரியும் விரியும் 
ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா 

பூஜை முறை :

மேற்கண்ட மோகினி வசிய யந்திரத்தை அமாவாசை நாளன்று யந்திரம் எழுதி பூஜை துவங்க வேண்டும் .மேற்கண்ட மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 15 தினங்கள் பூஜை செய்து பௌர்ணமி அன்று முடியும் வகையில் பூஜை செய்ய வேண்டும் 

கணவன் மனைவி வசிய திலகம் :

கணவனை வசியம் செய்ய பெண்களுக்கு மேற்கண்ட மந்திரத்தை ஒரு தம்பாளத்தட்டில் மஞ்சள் அல்லது குங்குமம் பரப்பி மேற்கண்ட யந்திரத்தை ஊதுவத்தியால் எழுத வேண்டும் .எழுதி அதற்கு மூலமந்திரத்தை 1008 உருக்கள் ஜெபித்து அந்த  மஞ்சள் அல்லது குங்குமம் நெற்றியில் வைத்தால் வசியமாவார்கள் .

Saturday 2 April 2016

கடன் தொல்லை நீக்கிடும் அன்னபூரணி

தீராத கடன் ,வறுமை,கஷ்டங்கள் நீங்கிட அன்னபூரணி 

கடன்பட்டுவிட்டால் மனதில் அமைதி இராது. எப்பொழுது கடன் கொடுத்தவன் கேட்க வந்து விடுவானோ என்ற அச்ச உணர்வு வந்து வாட்டும்.நம்முடைய தரித்திரம் காரணமாகவே கடன் தொல்லைகள் ஏற்படுகின்றன. 
கடன் தொல்லை அகன்றால் மட்டுமே நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற முடியும்.நமது கடன்களும், தரித்திரமும் நீங்க அன்னபூரணி நமக்கு உதவ முன் வருகின்றாள்.
அன்னபூரணி யந்திரம் 


அன்னபூரணி மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவதே 
அன்னபூர்னே மம பிரிஷித அன்னம் தேஹி சுவாகா 

வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து கொள்ள வேண்டும்.அன்னபூரணி யந்திரம் வளர் பிறையில் ரோகினி மிருகசீரிடம் , உத்திரம் ,சுவாதுய் இவற்றில் எதாவது ஒரு நட்சத்திரம் வரும் நாளில் இந்த யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்முதலில் யந்திரத்திற்கு அபிஷேகம் செய்து பின்பு தூபம் காட்டி நிவேதனப்போருட்களாக தேங்காய் பழம் பொங்கல் பழங்கள் பூக்கள் படைத்து மூலமந்திரத்தை தினம் 108 உருக்கள் வீதம் 11 நாட்கள் ஜெபிக்க சித்தியாகி அன்னை அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதன்பிறகு எல்லாவிதமான கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு வாழலாம் 

இப்படி முறையாக கையால் எழுதி பூஜை செய்த யந்திரங்கள்தான் சரியாக வேலை செய்யும் . முறையாக பூஜை செய்த யந்திரங்கள் நம்மிடம் உள்ளன .