Thursday 29 December 2016

பாலகிரகத் தோஷம் நீக்கும் மூலிகை

நிறைய வீடுகளில் குழந்தைகள் இருக்கும் இந்த குழந்தைகள் மட்டும் ஏன் அழுகிறது எதற்காக அழுகின்றது என்று பெற்ற தாயாராலே கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றது .அதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இந்த யந்திர மந்திரங்களின் மேல் நம்பிக்கை இல்லாததுதான் காரணம் .

எங்கள் அனுபவங்களை கூறுகிறோம் 

சிறு குழந்தைகள் திடீர் திடீர் என பயந்து அழுது விடும் அந்த இடத்தில் யாரும் வந்து பயம் காட்ட கூடிய வாய்ப்பே இல்லை ஆனாலும் குழந்தை அழுகின்றதே ஏன்? ,

அடுத்து இரவு நன்றாக குழந்தை தூங்கி கொண்டிருக்கும் பொது திடீர் என அழும் .திடீர் என பேதி ஆகும் அதற்கு மருத்துவரிடம் காண்பித்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுவார்கள் .


இப்படி எதனால் ஆகிறது என்றால் இளம் குழந்தை மனோதிடம் இல்லை எந்த ஒரு தேவதையும் வந்து உடலின் உள்ளே ஏறி பல இன்னல்களை கொடுக்கும் அடிக்கடி நோய் வந்துகொண்டே இருக்கும் .இதனைத்தான் பால கிரக தோஷம் ,பாலாரிஷ்டம் என்று கூறுவார்கள்

1 நாள் 1 மாதம் 1 ஆண்டு -நாயுருவி வேர்

2 நாள் 2 மாதம் 2 ஆண்டு -தூ துவளை வேர்

3 நாள் 3 மாதம் 3 ஆண்டு -முருங்கை வேர்

4 நாள் 4மாதம் 4 ஆண்டு -நந்தைச்சூரி வேர்

5 நாள் 5 மாதம் 5 ஆண்டு -ஓர் இதழ் தாமரை வேர்

6 நாள் 6 மாதம் 6 ஆண்டு-குப்பைமேனி வேர்

7 நாள் 7 மாதம் 7 ஆண்டு-வில்வமரவேர்

8 நாள் 8 மாதம் 8 ஆண்டு-ஊமத்தைவேர்

9 நாள் 9 மாதம் 9 ஆண்டு-மூ ங்கிரட்டை வேர் 

1 0 நாள் 1 0 மாதம் 1 0ஆண்டு -நில ஆவாரை வேர்

1 1 நாள் 1 1 மாதம் 1 1 ஆண்டு-எருக்கன் வேர்

1 2 நாள் 1 2 மாதம் 1 2 ஆண்டு-வட்டகிலுகிலுப்பை வேர்

1 3 நாள் 1 3 மாதம் 1 3 ஆண்டு-வட்டகிலுகிலுப்பை வேர்

1 4 நாள் 1 4 மாதம் 1 4 ஆண்டு-குட்டிவிளாத்தலை வேர்

1 5 நாள் 1 5 மாதம் 1 5 ஆண்டு-திருநீற்றுப் பச்சை வேர்

1 6 நாள் 1 6 மாதம் 1 6 ஆண்டு -கஞ்சாங்கோரை வேர்

மேற்கண்ட நாள்,மாதம்,ஆண்டுகளில் வரும் பாதிப்புகளுக்கு மேற்கண்ட மூ லிகை தாயத்து போட்டால் சுபம் ஏற்படும்.

லக்ஷ்மி வசிய கலசம்

பணவரவு உண்டாக 



நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால்  அதற்க்குன்டான முறைகளை செய்வதில்லை அப்படியே செய்தாலும் முறையாக செய்வதில்லை

ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்துஅதில் சிறிது

உப்பு, சர்க்கரை, 
பச்சரிசி, புளி,
பருப்பு,நவ தானியம், 
புனுகு, குங்கும பூ,
கஸ்துரி, ஜவ்வாது,
ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, 
வெற்றிலை பாக்கு,

இவை அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும் வெள்ளிகிழமை  காலை 6 முதல்  7 மணிக்குள்மேற்கூறிய அனைத்து பொருளையும்கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ என்றும் என்குடும்பத்தில் இருந்து அருளவேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்வைக்கவும், வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம்கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை வணங்க தொடங்கியதும் அடுத்த வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம்இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்வளம் பெற வேண்டுகிறேன்,

108முறை கூற வேண்டிய மந்திரம்

ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ

இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறி பயன் பெற வாழ்த்துக்கள.

மகாலக்ஷ்மி வசியம் உண்டாக ரகசிய பரிகாரம்



வெள்ளிகிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குங்குமத்தினால் 'ஸ்ரீம்' என எழுதி அதை சுற்றிலும் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி 'ஸ்ரீம்' மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு நிவேதனம் செய்யவும்.

பின்பு நிவேதனத்தை அப்படியே வைத்திருந்து மறு நாள் 9 வயதுக்குட்பட்ட ஐந்து பெண்களுக்கு அதை கொடுக்கவும். மீதம் இருப்பததை வீட்டில் உள்ள அனைவரும் உண்ணலாம்.

தொடர்ந்து வீட்டில் உள்ள எவரேனும் இதை 21 வெள்ளிகிழமைகள் செய்து வர 'லக்ஷ்மி கட்டு' எனப்படும் சதா பணகஷ்ட நிலைமை அடியோடு அழிந்து நிதி நிலை மேம்படும்.

இந்த 21 வாரங்களும் அசைவ உணவு சேர்க்காமல் இருப்பின், ஆரம்பித்த ஓரிரு வாரங்களிலேயே மிக நல்ல முன்னேற்றம் தெரியும்.

'லக்ஷ்மி கட்டு' ஏற்பட்டு அழிந்த பல குடும்பங்களை மீண்டும் முன்னேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது சக்தி வாய்ந்த இந்த பரிகாரம்

வசிய சூட்சம ரகசியங்கள்

வசி வசி என்று தினம் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும் என்றார்கள் நம் சித்தர்கள்.

வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம் ஆட்டி படைக்கிறது  என்று பார்ப்போம்.

நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது, சிலர் குறுக்கு வழியில் கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.

ஒரு தாய் தன் மகன் மீது அன்பு செலுத்துகிறாள். அந்த அன்புக்கு போட்டியாக மருமகள் என்பவள் வந்து தன்னை உதாசீன படுத்தும்போது அவர்கள் இருவரையும் தன் கட்டுக்குள் கொண்டுவர அவள் கையில் கொண்டு வரும் ஆயுதம்தான் இந்த வசியம்.

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணின் மைந்தருக்கு மாமலையும் கடுகளவாம் என்கிறார் பாரதிதாசன்.

அந்த கடை கண் பார்வை தனக்கு கிடைக்காத போது, அந்த இளைஞனின் கண்ணில் படுவதுதான் இந்த வசியம் என்கிற போர் ஆயுதம்.

ஒரு பெண் தன் கணவன் மீது மாறாத அன்பு வைத்திருக்கிறாள். அவனுக்கு வேறு தொடர்பு ஏற்பட்டு தானும் தன் குடும்பமும் சீரழிக்கப்படும் போது, என்ன விலை கொடுத்தாவது அவனை தன் வழிக்குள் கொண்டுவர அவள் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த வசியம் என்ற A .K .47 .

பங்காளி பழிஎடுப்பான் என்பார்கள். பங்காளியால் மட்டும் அல்ல, மற்ற எதிரிகள் தொல்லையாலும், பாதிக்கபடுகிற பொழுது மனதளவில் பாதிக்க படுகிற போது, அவர்களை அழிக்க தங்கள் கையில் ஏந்துகிற ஒரு வெடிகுண்டு தான் இந்த வசியம்.

தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக  முயற்சியே இந்த வசியம் எனப்படும்.

இதை அத்தனை பேருமே கடைபிடிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அதுபோன்ற குறுக்கு வழிகளை நாடி, அதனால் நன்மையோ அல்லது தீமையோ பெறவேண்டும் என்கிற விதியமைப்பு இருக்கிற நபர்கள் மட்டுமே அந்த பக்கம் போகிறார்கள்.

நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான் வசியம்.

இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம். சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர் வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம், பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று ஆறு வகையாக பிரித்துள்ளனர்.

உலகம், பகைவர் மற்றும் விலங்கு வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும், அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர் வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும் பயன்படுத்தி உள்ளனர்.

வசியத்தை நடைமுறை  வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது

1 . மந்திரம்
2 . யந்திரம் அல்லது சக்கரம்.
3 . மூலிகை
4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி இவைகளை பற்றி ஆராய்வோம்.

மந்திரம்

குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே மந்திரம் எனப்படும்.

வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும் அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர எழுத்துகளுக்கு உண்டு.

நமது சித்தர்களும் நமசிவாய என்ற ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின் ரகசியங்களும் அடங்கி இருந்ததை அறிந்திருந்தார்கள்.

நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள்.

இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும் பயன் படுத்தி உள்ளனர்.

ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது வசியதிற்கான முலமந்திரமாகும்.

இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள் சித்தர்கள்.

கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது.  உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம் இந்திரன். 

வசிய ஆற்றலைத்தான் இன்றைய  விஞ்ஞானம் மெஸ்மரிசம் என்று குறுப்பிடும்.

எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை படுத்தி படிக்கும் போது நமது உடலில் மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும். இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று குறிப்பிடுவார்கள்.

தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம் தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின் மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது யந்திர முறையாகும்.

இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22 வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால் செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம் அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால் ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.

இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள் பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர்.

நாம் வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.

இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும். இது ஒரு முறை.

எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும் மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன. இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர முறையாகும்.

தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால் எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும் தராது.

தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின் பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை சிதற விட மாட்டார்கள்.

அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?

ஐயோ பாவம்..முறையாக உருவேற்றபடாத எந்த சக்கரத்திற்கும் சக்தி இல்லை.

நீங்கள் ஏமாறவும் வேண்டாம், ஏமாற்று காரராகவும் மாற வேண்டாம். நீங்கள் நீங்களாகவே வாழ  முயற்சியுங்கள்.

Sunday 25 December 2016

பயில்பவர்களுக்குள் எழும் கேள்விகள் ?

இந்த காலகட்டத்தில் ஒரு சிலர் மாந்திரீகம் பயின்று கொண்டு இருக்கின்றனர் அவர்களிடம் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர் .அந்த கேள்விகளை குறிப்பிடுகிறேன் இதற்கான பதில்கள் நம்மிடம் முறையாக பயிபவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்விகளே அவர்கள் மனதில் எழாது .

  · முறைப்படி பூஜை தொடங்குவது எப்படி இப்போது நான் செய்யும் பூஜைகள் சரிதானா ?

·    ஒரு வீட்டிற்குள் சென்றதும் அங்கு என்ன பிரச்சனைகள் இருகின்றது என்று கண்டறிவது எப்படி?

·       தேவதைகளை சித்தி ஆகிவிட்டதா என்று எப்படி கண்டறிவது ?

·       ஒருவருக்கு வியாபாரம் சரிவர நடக்கவில்லை அதற்கு என்ன காரணம் என்று கண்டறிவது எப்படி?

·       ஒருவருக்கு எதிரியால் தினமும் தினமும் தொல்லை அதை சரி செய்ய என்ன கொடுக்க வேண்டும் ?

· ஏவல் பில்லி சூன்யம் அப்படியெல்லாம் கூறுகிறார்களே அது  உண்மையா?
·       பேய் விரட்டுவது எப்படி அதற்கு என்ன செய்ய வேண்டும் ?

·       எந்தெந்த தேவதைகளுக்கு எப்படியெல்லாம் நைவேத்தியம் படைக்க வேண்டும் ?

·    நாம் மந்திரம் சித்தியாகும் சமயம் நம்மிடம் என்னவெல்லாம் இருக்க வேண்டும் ?

·       சித்தி ஆன பிறகு எப்படி அந்த தேவதையை கையாள வேண்டும் ?

· எந்த தேவதைகளாலும் நமக்கு ஆபத்துக்கள் வராமல் பாதுகாப்பது எப்படி?

· ஒரு கோயிலுக்கு சென்றால் அங்கு என்னென்ன தெய்வங்களின் பீடங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று சொல்வது எப்படி?

·       ஏவல் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி?

·       அஞ்சன மைகள் தயாரிப்பது எப்படி?

· ஒருவர் ஏதேனும் பிரச்சனைகளுக்காக வந்தால் அதை கையாளுவது எப்படி ?

·       ஒரு தேவதை சித்தி ஆக எத்தனை நாட்கள் எடுக்கும் ?

·       வசிய வித்தைகளில் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் ?

·       மாந்திரீகம் அழிவு வித்தை என்று கூறுகிறார்களே அது உண்மையா ?

·       நிறைய பேரிடம் படித்த வித்தைகள் பலிக்க வில்லை ஏன் ?

இன்னும் பல கேள்விகள் எழும் அதில் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் ,இந்த கலையை யாரும் எழுத்தில் சொல்லித்தர முடியாது நானும் பயிற்சி தருவதாக சொல்லி ஒரு வருடம் ஆகியும் என்னால் கொடுக்க முடிய வில்லை ஏனென்றால் அதற்கும் ஒரு சில பதில்களுக்காக காத்திருந்து அதற்கு பிறகு கொடுத்தால் மட்டுமே எல்லோருக்கும் நல்லதாக அமையும் .

நமக்குள் எழும் கேள்விகள் ?

மாந்திரீக வைத்திய வித்தைகளை பொறுத்த வரையில் பல விசயங்களை அனுபவபூர்வமாக ஆராய்ந்து பலன் அல்லது பதில் சொல்ல வேண்டும் ஏனென்றால் நம்மை நாடி வருபவர்கள் நம்மை தெய்வத்தின் தூதுவனாக எண்ணிக்கொண்டு வருவார்கள் நாம் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கொடுக்கவில்லை என்றால் .நாம் அந்த இடத்தில் மிகவும் அந்தஸ்தான ஒரு இடத்தில் நிச்சயமாக இருக்க முடியாது ஆகவே மாந்திரீகத்தை பொறுத்த வரையில் அனுபவம் ரொம்ப முக்கியம் .ஒரு சில விசயங்களை ஆராய்ந்து அது நோயா பேயா என்று துல்லியமாக கூற வேண்டும் அவன் தான் உண்மையான மாந்திரீகன் .

கீழே நிறையபேர்கள் எங்களிடம் கேட்கும் கேள்விகளை உங்களுக்கு கொடுக்கிறேன் அதற்கு நாங்கள் சரியான முறையில் பூஜை முறைகளை செய்து வெற்றி கண்டுள்ளோம் .

1.      கொடுத்த கடன் வசூல் ஆகவில்லை அதற்கு என்ன யந்திரம் போடவேண்டும் இல்லைஎன்றால் அதற்கான தாந்திரீக வழிகள் ஏதேனும் உண்டா?
2.      பக்கத்து நிலத்திற்கு சொந்தக்காரன் என் வாசல் நோக்கி ஒரு சாமி சிலையை வைத்து விட்டார் அதற்கு என்ன செய்வது ?

3.      வியாபாரமே இல்லை என்ன செய்வது ?விற்றாலும் கடன்தான் போகிறது பணம் கைக்கு வருவதில்லை ?

4.      பேய் உடலில் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி?

5.      நாளுக்கு நாள் உடல் இளைத்து கொண்டே போகிறது அடிக்கடி தலைசுற்றல் வருகிறது அதற்கு காரணம் என்ன அவர் உடம்பில் என்ன உள்ளது?

6.      சென்ற இடமெல்லாம் தோழில் கிடைக்க வேலை வாய்ப்புகள் தேடி வர என்ன யந்திரம் போடலாம் ?

7.      கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு அதிகமான மீன் அகப்பட என்ன யந்திரம் கொடுக்க வேண்டும் ?

8.      சாமி அருள் வந்து ஆடும் பொது அதை நிறுத்துவது எப்படி ?

9.      கண்திருஷ்டி பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?

10.  குழந்தைகள் திடீரென்று பயந்து அழுகிறார்கள் ,வாந்தி பேதி வருகிறது மருத்துவரிடம் சென்றால் நோய் ஒன்றும் இல்லை அதற்கு காரணம் என்ன ?

11.  அடிக்கடி தீராத வயிற்று வலி வருகிறது மருத்துவரிடம் சென்றால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்பார் அந்த வயிற்று வலியின் காரணம் என்ன ?

12.  ஒருவருக்கு தன்னுடைய குல தெய்வம் யார் ? அது எங்கிருக்கிறது என்று தெரியாது அதை கண்டுபிடித்து கொடுப்பது எப்படி?

13.  குடுப்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் தொல்லைகள் நீங்க எந்த யந்திரம் போட வேண்டும்?

இன்னும் பல விசயங்கள் எங்கள் அனுபவத்தில் கண்டு வருகிறோம்.ஆக இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிய நமது பயிற்சியில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் நீங்களும் பலர் போற்றும் வகையில் மரியாதையோடு நடந்து கொள்ளலாம் .

ஆண் பெண் வசியமாக...

இன்றைய  காலத்தில் பல குடும்பங்களில் ஒற்றுமை என்பது குறைவாகிவிட்டது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து பெற்றவர் பலர். சரி கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் குடும்பத்தின் மற்ற உறுபினர்களால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி வயதில் மூத்த பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் அனாதை ஆசரமங்களில் தவிக்கவிட்டவர்கள் பலர். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் குடும்பம் கோவிலாகும். வாழும் போதே சொர்க்கம் காணலாம். இப்படி வாழ எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் முடியவில்லையே, காரணம் ஒருவருக்கு ஒருவர் வசியம் இருக்காது. இந்த நிலை மாற பலர் என்னிடம் வழி கேட்டனர். இதோ அந்த வசியத்துக்கு வழி

      வெள்ளெருக்கு, அழுகண்ணி, கோரோசனை, மண்டூகபிட்சு இவைகளை எருக்கின் பழுத்த இலைகளின் சாரல் அரைத்து மையை எடுத்து வசிய மந்திரம் 1008 உரு சொல்லி மையிக்கு உயிர் கொடுத்து, அதன் பின் நமக்கு இஷ்டமனவர்கள் மேல் தடவ அவர்கள் வசியமாகி நம்மை விட்டு பிரியமட்டர்கள்.

         ஆயுள் முழுவதும் நாம் வசியம் செய்யும் ஆணோ, பெண்ணோ நம்மை விட்டு விலகாமல் இணை பிரியாமல் வாழ வேண்டுமானால் சித்தர் சொல்லி வைத்த சில இரகசிய முறைகள் எங்களால் தயாரிக்க பட்டு, உங்களின் பெயர் உங்களுக்கு வசியமாக வேண்டிய நபரின் பெயர் நட்சத்திரம் சொல்லி மந்திர முறை மூலம் உருவேற்றி குளிகைகளாக தருகிறோம். இந்த வசிய குளிகைகளை சுவாமிஜி சொல்லும் முறையில் தின்பண்டங்களில் வைத்து நீங்கள் வசியமக்க வேண்டிய நபருக்கு கொடுத்தல் அதை உண்டவர் வசியமாகி ஆயுள் முழுவதும் நம்மை விட்டு இணை பிரியாமல் இருப்பர். 

Saturday 24 December 2016

சுக்ரதோஷ பரிகார யந்திரங்கள்

சுக்ர தோஷ பரிகார மூலிகைவேர் ,யந்திரங்கள் .

ஒருவரது வாழ்க்கையில் சுக போகங்களுக்கும் சுபிட்சங்களுக்கும் மணவாழ்க்கைக்கும் நல்ல வேலை கிடைக்கவும் நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்கள் எண்ணம் போல் நடக்கவும் மூலக்காரணமாக இருப்பது களத்திரகாரகன் சுக்ர பகவான் .ஜாதகத்தில் ஆதிபத்யம் நன்றாக இருந்தால் நன்மைகள் கூடும் ஆதிக்கம் குறையுமானால் தீமைகள் நடக்கும் தடைகள் அதிகம் இருக்கும் .

அத்தி மர வேர்

சுக்கிரனுக்கு உகந்த அத்திமர வேரினை சுக்கிரவாரம் நல்ல நேரம் பார்த்து வெட்டி எடுத்து வந்து அதில் சுக்கிரனுக்குரிய மூலமந்திரத்தை உருவேற்றி அதில் பஞ்ச வர்ண நூல் சுற்றி அதை தாயத்தாக அணிந்து கொண்டால் தடைகள் அனைத்தும் விலகும் .

சுக்கிர பரிகார யந்திரம்

சுக்கிரனுக்குரிய யந்திரங்கள் பல வகை யந்திரங்கள் உண்டு  அதில் எண் யந்திரங்கள், மகாலட்சுமி யந்திரம் ,சுக்கிர பரிகார யந்திரங்கள் இவைகளை அணிந்தாலும்   தடைகள் விலகும் இதை தாயத்தாகவோ அல்லது பாக்கட்டில் வைக்கும் படியாக தயார் செய்து பாக்கட்டில் வைத்தும் பலன் பெறலாம் .

இதை அணிந்தால் தடைபட்டோ தாமதப்பட்டோ வருகிற திருமண காலம் நெருங்கி வரும் ,மனைவியை பிரிந்து வாழும் கணவன் ,கணவனை பிரிந்து வாழும் மனைவி கூட இந்த சுக்கிர பிரீத்தி அடைந்து பலன் பெறலாம் .

மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை அருகில் சென்று மூலிகை இருக்கும் இடத்தை   சுத்தம்   செய்து     கொள்ள வேண்டும். பின்பு தேங்காய், வாழைப்பழம், சூடம், பத்தி, சாம்பிராணி, வெற்றிலை பாக்கு, அவல், பொறி, கடலை, இளநீர், கல்கண்டு, விபூதி, சந்தனம், குங்குமம், பொங்கல், இவைகளை தல வாழையிலையில் வைத்து ஆரம்பிக்க வேண்டும். முதலில் நாம் செய்ய வேண்டியது ஒரு வெள்ளை நிறமுள்ள நூலில் மஞ்சள் தடவி பின்பு ஒரு விரல் மஞ்சள் கோர்த்து தாலி கட்டுவது போல் மூலிகையின் மீது கட்டவும். பின்பு தேங்காயுடைத்து குரு மந்திரம் 33  தடவை கூறவும் பின்பு விநாயகர் மந்திரம் 108 முறை கூறவும். பின்பு நம் குல தெய்வத்தையும், நம் முன்னோர்களையும் வணங்கி மூலிகை சாப நிவர்த்தி மந்திரத்தை 1008 முறை கூறி முப்பலி கொடுத்து இரும்பாலாகிய ஆயுதம் படாமல் ஆணிவேர் ஆறாமல் தோண்டி எடுக்கவும்.

சாப நிவர்த்தி மந்திரம்

“ஓம் சர்வ மூலிகையே உன் சாபம் சாபம் நசி மசி, பரமசிவன் சாபம் நசி மசி. பார்வதி சாபம் நசி மசி, அகஸ்தியர் சாபம் நசி மசி, சப்தரிஷி சாபம் நசி மசி, கோடான கோடி ஜீவ ராசிகளின் சாபம் நசி மசி, ஏனையோர் சாபம் நசி மசி, சகலமும் எனக்கு வசி வசி வசியமாக சுவாஹா”  

“ஓம் மூலி சர்வ மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா”

சாப நிவர்த்தி சில சூட்சுமங்கள்

1.தன்னுடைய பட்சி அரசிலும், சுப ஓரையிலும் எடுக்க வேண்டும்.
2.ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, சந்திர சூரிய கிரஹணம், இப்படிப்பட்ட நாட்களில் எடுக்க வேண்டும்.
3.இல்லையெனில் தாரா பலன் நட்சத்திரத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டும். இது 100% மிகச்சிறந்த பலனைத்தரும்.
4.நிர்வாணமாக இருந்து எடுக்க வேண்டும்.
5.சுண்டு, விரல் நகம் படக்கூடாது.
6.படையல் சரியாக வைக்கவும்.
7.விரல் மஞ்சள் வைத்து தான் காப்பு கட்ட வேண்டும்.
8.பிரம்ம முகூர்தத்தில் தான் எடுக்க வேண்டும்.
9.அரைஞாண் கயிறு இருக்கக்கூடாது.
10.முப்பலி கொடுத்துதான் எடுக்க வேண்டும்.(தேங்காய், வெண்பூசணி, எழுமிச்சம்பழம் இவைகளில் குங்குமம் தடவி மூலிகையின் மீது படும்படி செய்யவும்).

நங்கிலி என்றால் கிலுகிலுப்பை மூலிகை

பஞ்ச பட்சி வித்தையை பற்றிய சில விசயங்களை படித்து கொண்டு தவறான விசயங்களை மக்களிடம் பகிர்ந்து அதை பயின்றவர்கள் ஏமாற்றம் அடைந்து பலனில்லாமல் பஞ்ச பட்சி கலை பொய் என்றெல்லாம் கூறுகிறவர்களை நான் கண்டுள்ளேன் .

பஞ்ச பட்சி கலையை பிரயோகித்தால் ஒவ்வொருவரின் வாழ்க்கையையே மாற்ற முடியும் .பஞ்ச பட்சி ரகசியத்தை பயின்றவர்கள் அவர்களைத்தேடியே மக்களை வரவழைக்க முடியும் விளம்பரங்கள் தேவை இல்லை .

இந்த கலையை பயின்று இந்த கலையை பிரயோகிக்க முடியாமல் ஊருக்கு பயந்து ஊரை விட்டு ஒதுங்கி வாழ்பவர்கள் இருக்கிறார்கள் .இந்த கலையை பற்றிய ஒரு விஷயத்தை கூட வெளிக்காட்ட மாட்டார்கள் .

நங்கிலி என்றால் கிலுகிலுப்பை மூலிகை 

நங்கிலி மூலிகை ரகசியம் என்றெல்லாம் கூறுகிறார்கள் இதெல்லாம் பெரிய ரகசியம் இல்லை எல்லா மூலிகைகளைப்பற்றி சொல்லிகொடுத்தாலும் அதை பிரயோகிக்க கூடிய திறமை இப்போது யாரிடமும் இல்லை மூலிகையை மட்டும் தெரிந்து கொண்டு எதுவும் சாதித்து விட முடியாது 

சகல பிரச்சனைகளுக்கும் மாந்திரீக தீர்வு

கெட்ட கனவு, சகுன பாதிப்பில் இருந்து விடுபட:

 எந்த கிழமையாக இருந்தாலும் அன்ற சூரிய உதயத்திற்கு முன்பு “ஓம் சிவசிவ ஓம்”மனதார ஜெபித்து வெண் பூசணியை உணவில் சேர்த்து சாப்பிட உடனே தோஷம் நீங்கும்

 நவக்கிரக தோஷம் விலக:

 வீட்டில் நவதானியங்களை கொண்டு முளைப்பாரி போட்டு வளர்த்து அதனை ஏதாவது ஒரு வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் பூஜை செய்து ‘ஓம் அரி ஓம்” என்று 1008 உரு அருகம்புல் கொண்டு ஜெபித்து தண்ணீரில் முளைப்பாரியை கரைத்து விட உடனே நவக்கிரக தோஷம் விலகும்.

 செவ்வாய் தோஷம் விலக :

 செவ்வாய்தோஷம் பாதிப்பு உடையவர்கள் மண்கலயத்தில் கும்பம் வைத்து தேங்காய்க்கு பதிலாக வாழை பூவை வைத்து மல்லிகை பூவை கொண்டு 1008 உரு ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை விட்டு விட உடனே செவ்வாய்தோஷம் விலகும்.  
   
 செய்வினை, ஏவல் பாதிப்பு விலக:

 தினசரி விநாயகர் அகவல் படித்து, பிரண்டை துவையல் சாப்பிட்டு வரவும்
தேனில் “ஓம் அரி ஒம்”; மந்திரத்தை ஜெபித்து, தேனை சாப்பிட்டு வர செய்வினை, ஏவல் பாதிப்புகள் விலகும்.  

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட 

குடிப்பழக்கத்தில் இருந்து கணவனை திருத்த விரும்பும் பெண்கள் புவனேஸ்வரி படம் வாங்கி அதில் பாஸ்போர்ட் சைஸ் அளவில் கணவன் படத்தினை உள்ளே வைத்து பிரேம் செய்து அந்த படத்தினை கன்னி மூலையில் வைத்து மல்லிகைப்பூ கொண்டு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று 1008 உரு வீதம் 90 நாட்கள் ஜெபித்து பின்பு தினசரி 300 உரு ஜெபிக்க கட்டாயம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்                                                                        

கணவன், மனைவி ஒற்றுமை ஏற்பட:

ராகவேந்திரர் படத்திற்கு மல்லிகைப்பூ மாலை போட்டு அவரை குருவாக ஏற்று வணங்கி பின்பு அந்த படத்திற்கு முன்பு பட்டுத் துணியில் அமர்ந்து “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று தினசரி 300 உரு ஜெபிக்க கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படும்.                                             ---

வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட:

(ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில் ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு “ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும். 48 நாட்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.    

பாவகர்மாக்களில் இருந்து விடுபட:

இளநீரில் உள்ள தண்ணீரில் கல்கண்டு சேர்த்து அதில் 1008முறை “ஓம் சிவசிவ ஓம்” என்று தர்ப்பைப்புல் கொண்டு ஜெபித்து தினசரி சூரிய உதயத்திற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்பு இளநீரை குடிக்க வேண்டும். பின்பு, சிவபுராணம் படிக்க வேண்டும். இதனால் முன்ஜென்ம பாவ கர்மாக்கள் படிப்படியாக குறையும்.   

காமேஸ்வரி எட்சணி

காமேஸ்வரி எட்சணி மூல மந்திரம் 

ஓம் காமேஷ்வரி காம் சித்தேஷ்வரி சுவாஹா 
ஓம் பட் சுவாஹா ஓம் க்ரீம் குரு சுவாஹா 

காமேஸ்வரி எட்சணி மூல மந்திரம் 2 

ஓம் ஹ்ரீம் ஆகச்ச ஆகச்ச 
காமேஷ்வரி சுவாஹா 

காமேஸ்வரி எட்சணி மூல மந்திரம் 3

ஓம் ஹீம் ஹம் காமேஸ்வர்யே 
ஹம் ஹம் ஹம் 

இந்த ஏதாவது ஒரு  மந்திரத்தை முப்பது நாட்களில் ஒரு லக்ஷம் முறை ஜெபித்தால் சித்தியாகும் .இதனால் பல காரிய சாதனைகள் புரியலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ஜெய விஜய யட்சணி

ஜெய யட்சணி மூல மந்திரம் 

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் நமோ நம ஜெய ஹம் பட் 

விஜய யட்சணி மூல மந்திரம் 

ஓம் கிலி கிலி குதி காதி துகத் துகத் 
வசமானாய விஜயே ஆஹ் ஆஹ் சுவாகா 

இந்த தேவதையை விஷ்ணு ஆலயத்தின் வாயிலில் இரண்டு பக்கத்திலும் பெண் உருவங்களில் சிலை வைத்திருப்பார்கள் அந்த தேவதைகளுக்கான மந்திரம் தான் மேற்கூறியவை .

இந்த மந்திரம் பிரயோகம் செய்யும் பொது இரண்டு மந்திரங்களையும் ஒரே முறையில் சொல்லி விடக்கூடாது ஓன்று ஜெபித்து சித்தி ஆன பின்பு அடுத்ததை தொடர வேண்டும் .

இந்த மந்திரத்தை எதாவது அமாவாசை தினங்களில் தான் பூஜை துவங்க வேண்டும் இதை ஏதாவது ஆற்றங்கரை அல்லது நந்தவனம் ,சிவன் ஆலயம் இது போன்ற இடங்களிலிருந்து ஜெபிக்கலாம் .

ஷோபன எட்சணி

இந்த எட்சணி ஒரு குறிப்பிட்ட விஷயங்களின் பாதுகாவலுக்காக வைத்திருந்ததாகவும் ,இந்த தேவதையை சித்தி செய்து கொண்டால் நல்ல செல்வ வளமோடு வாழலாம் என்றும் கூறுகிறார்கள் .இந்த எட்சணி இருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் கொழிக்கும் .

ஷோபன  எட்சணி மூலமந்திரம் :

ஓம் அசோக் பல்லவ கர் கர்த்தலே 
ஷோபிணி ஷ்ரீம் க்ஷா சுவாகா   

இந்த மந்திரத்தை எவ்வளவு அதிகம் உருக்கள் எவ்வளவு அதிகம் ஏற்ற முடியுமோ அவ்வளவு 14 நாட்கள் தொடர்ச்சியாக ஓத வேண்டும் மந்திரம் ஜெபிக்கும் பொது சிவப்பு பட்டு உடுத்த வேண்டும் சிவப்பு மணிமாலை அணிந்து மந்திரம் ஜெபிக்க வேண்டும் .

இந்த மந்திரம் எவ்வளவு அதிகம் ஜெபிக்க முடியுமோ ஜெபித்தால் சகல செல்வா வளங்களும் குறைவில்லாமல் கிடைக்கும் .

கர்ண பிசாசினி

கர்ண பிசாசினி என்னும் தேவதை யட்சணி வகையை சார்ந்ததுதான் கர்ண யட்சணி என்றும் ஒரு தேவதை உண்டு அந்த தேவதையும் முக்காலமும் காதில் வந்து பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் நினைத்த கேள்விகளுக்கான குறி சொல்லும் இந்த சப்தம் ஒரு வகையான கீச்சு குரலில் அமையும் .அந்த தேவதையை போலவே இந்த கர்ண பிசாசினி தேவதையும் குறி சொல்ல கூடியதுதான் .

மற்ற குறி சொல்லும் தேவதைகளுக்கும் இந்த தேவதைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மற்ற தேவதைகளை வைத்து குறி சொன்னால் உணர்ந்து சொல்ல வேண்டும் .இந்த தேவதைகள் அப்படி அல்ல .இந்த தேவதையானது காதில் வந்து பேசும் .முதலில் சித்தி செய்யும் போது காதில் ஒரு வகையான இரைச்சல் சப்தம் கேட்கும் அதற்கு பிறகு ஒரு காத்து சுத்தமாக கேட்காது .அதற்கு பிறகுதான் அந்த தேவதை பேசும் சப்தம் நம் காதுக்கு கேட்கும் .

இந்த மந்திரத்தை அகோரிகள்தான் பயன்படுத்துகிறார்கள் அதனால் இந்த உபாசனா செய்யும் பொது மிகவும் பாதுகாப்பு அவசியம் .

கர்ண பிசாசினிமூலமந்திரம் :

ஓம் ஹ்ரீம் சமன் சக்தி பகவதி கர்ண பிசாசினி 
சந்திர ரூபிணி வட் வட் சுவாகா 

இந்த மந்திரத்தை 125000 உருக்கள் ஏற்றி சித்தி செய்த பின்னர் அந்த தேவதை உங்களிடம் பேசும் .

சின்ஹணி யட்சணி வசிய முறை:

இந்த தேவதையை வசியம் செய்ய நீங்கள் ஒரு திடமான மனதோடு இருந்து மந்திரம் ஜெபித்தால் மட்டுமே சாத்தியமாகும் .இந்த தேவதை பிரசன்னமாகும் சமயம் நாம் மனதில் சிறிது சலனம் ஏற்பட்டாலும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன .

மூல மந்திரம் :

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் பட் பட்
ஹூம் ஹூம் ஹூம் 
சின்ஹணி  பட் 

பிரயோக முறைகள் :

மேற்கூறிய மந்திரத்தை தனிமையான இடம் நந்தவனம் ,அல்லதுசிவன் கோயிலில் இருந்து 10000 உருக்கள் ஜெபிக்க வேண்டும் இந்த பூஜை துவங்குவதற்கு முன்னால் கணபதி பூஜை , சிவ பூஜை செய்து விட்டு அதற்கு பிறகு இந்த மந்திரத்தை 10000 உருக்கள் ஜெபித்தால் சித்தியாகும் .

இந்த தேவதையை வசியம் செய்து கொண்டால் உலகில் உள்ள அனைத்து விதமான வசிய வேலைகள் அனைத்தும் செய்ய முடியும் .இதனால் ஆண் பெண் வசியம் ,லோக வசியம் ,ராஜ வசியம் தன வசியம் ,மிருக வசியம் என்று அனைத்து விதமான வசிய பிரயோகங்களும் செய்யலாம் .இந்த தேவதை சித்தி செய்யும் பொது பல இடையூறுகள் ஏற்படக்கூடும் .

மனோ திடம் உள்ளவர்கள் மட்டும் குரு உபதேசம் பெற்று முயற்சிக்கவும் .இது அனுபவ முறை அல்ல .........

ஆண் பெண் வசியம்



சில  குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.

       விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...

         இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காத
லி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..

         இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு வசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.

         வெள்ளிக்கிழமை தினம் தன் நட்சத்திர பட்சி ஆட்சி செய்யும் வேளையில் மிளகு சாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து கிழக்கே போகும் வேரை எடுத்து வசிய மந்திரம் (யநமசிவ) என்று 1008 உரு சொல்லி தாயத்தில் அடைத்துக் கட்டிக்கொண்டால் பார்க்கும் அனைத்து பெண்களும் வசியமாவார்கள்.

 எந்த வசிய முறையையும் குரு வழிகாட்டுதலுடன் செய்ய உடனே பலன் தரும்..

பல வழிகளில் செல்வம் கொழிக்க..



ஆடி மாதம் பவுர்ணமி அல்லது ஆடி மாதம் வளர்பிறை ஞாயிறு அன்று ஆவாரை செடிக்கு தூப தீபம் காட்டி நிவேதனம் செய்து செடியிடம் வேண்டி கொண்டு அதன் வேர் அறுந்து விடாமல் செடியை எடுத்து ஆயுதம் உபயோகிக்காமல் வேரை மட்டும் எடுத்து மஞ்சள் பூசி, மஞ்சள் துணியில் கட்டி பணப்பெட்டியில் வைத்து அடிக்கடி தூப தீபங்கள் காட்டி வர லக்ஷ்மி கடாட்சம் ஏற்பட்டு மிகுந்த செல்வம் சேரும்.

அதே போன்று வெள்ளிக்கிழமை 6-7 மணிக்குள் கரு ஊமத்தை செடிக்கு பூஜைகள் செய்து வேரை மேற்சொன்ன முறைப்படி எடுத்து மஞ்சள் தடவி தூப தீபம் காட்டி தாயத்தில் அடைத்து வலது புஜத்தில் கட்டி கொள்ள பணம் பல வழிகளில் வரும். இது போன்று நம் முன்னோர்கள் கொடுத்து சென்ற முறைகள் பல உள்ளது.

சாபங்கள் மொத்தம் எத்தனை ?

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது 
1) பெண் சாபம், 
2) பிரேத சாபம், 
3) பிரம்ம சாபம், 
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம், 
6) கோ சாபம், 
7) பூமி சாபம், 
8) கங்கா சாபம், 
9) விருட்ச சாபம், 
10) தேவ சாபம் 
11) ரிஷி சாபம் 
12) முனி சாபம், 
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) பெண் சாபம் :
இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம் :
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்:
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்:
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்:
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்:
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்:
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்:
பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்:
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்:
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்:
எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம் :
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்

Tuesday 20 December 2016

மூலிகை வித்தை

பொதுவாக மாந்திரீகத்தில் 95 % வித்தைகள் மூலிகையை முன்னிலை படுத்தியே வருகிறது .இந்த வித்தையை சரியாக உணர்ந்து கொண்டால் அவனை இந்த வையகத்தில் எவராலும் ஜெயிக்க முடியாது .

இந்த வித்தையை அறிந்தவர்களுக்கு நிச்சயமாக பஞ்ச பட்சி சாஸ்திரமும் அறிந்திருக்க வேண்டும் ,ஏனென்றால் மூலிகைகளுக்கு உயிர் உண்டு அந்த மூலிகைகளுக்கு முறையாக சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கினால் அந்த சாபமானது நம்மை தாக்கும் என்பதில் ஐயமில்லை .

அதற்காக மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை பார்ப்போம்

எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும் .

தேவையானவை :

முனை முறியாத மஞ்சள் 
நூல் 
மஞ்சள் போடி 
பத்தி 
சூடகம் 
சாம்பிராணி 
வாழைபழம் 
வெற்றிலை 
பாக்கு 
நைவேத்தியம்

இவைகளை அந்த மூலிகையின் முன் படைத்து அதற்கு கீழ் கண்ட மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் :

ஆனைமுகனை அனுதினம் மறவேன் 
அகத்தியர் சாபம் நசி நசி 
சித்தர்கள் சாபம் நசி நசி 
தேவர்கள் சாபம் நசி நசி 
மூவர்கள் சாபம் நசி நசி 
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி

என்று மூன்று தடவை விபூதி கையில் எடுத்து வைத்து கொண்டு கூறி மூலிகை மேல்போட மூலிகை சாபநிவர்த்திபெறும்  அதன் பின் மஞ்சள் நூல் காப்புக்கட்டி முலிகை பிடுங்க வேண்டும்பி டுங்கிய மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் ஜெபிக்க வேண்டும்

மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் :

ஓம் மூலி மஹா மூலி ஜீவ மூலி 
உன் உயிர் உன் உடலில் நிலைத்து நிற்க சிவா

என்று மூன்று தடவை மந்திரம் ஜெபித்து கொஞ்சம் விபூதியும் அருகம்பில்லும் மூலிகை மேல் போடா மூலிகை உயிருடன் இருந்து பலன் கொடுக்கும் . இந்த முறையில் மூலிகை பிடுங்கி அதற்குரிய யந்திரத்தை எழுதி பிரயோகம் செய்தால் மட்டுமே அது முளிமையான பலன் கொடுக்கும் .இல்லை என்றால் 100% பலன் முடியாது .

மூலிகை வித்தைகள் :

பஞ்ச பட்சி மூலிகை வித்தை 
ஜல ஸ்தம்பன மூலிகை 
சுக்கில ஸ்தம்பன மூலிகை 
சர்ப்ப ஸ்தம்பன மூலிகை 
தெய்வ ஆகர்சன மூலிகை 
ஸ்திரி ஆகர்சன மூலிகை 
மிருக வித்வேஷன மூலிகை 
விஷ மாரண மூலிகை 
பூத பிசாசு மாரண மூலிகை 
சொர்ண வசிய மூலிகை 
தேவதை வசிய மூலிகை 
அக்கினி ஸ்தம்பன மூலிகை 
பூத உச்சாடன மூலிகை 
சத்ரு பேதன மூலிகை

இப்படி இன்னும் பல மூலிகை வித்தைகள் உள்ளன  இவைகளை முறைப்படி பயின்றால் மட்டுமே வெற்றிகிடைக்கும் .

Monday 19 December 2016

இசக்கி அம்மன் வசியம்

எங்கள் பகுதிகளில் இசக்கி அம்மன் என்று ஒரு காவல் தெய்வத்தை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.அவரவர் தோட்டத்தில் கன்னி மூலையிலே இந்த தெய்வத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு எண்ணெய் மஞ்சனம் என்று குங்குமங்கள் சாத்துவார்கள் அதை குளிமை படுத்துவதற்காக நல்லெண்ணெய் சாத்துவார்கள் அதற்கு சிவப்பு பட்டு உடுத்தி அரளி மாலை அணிவிப்பார்கள் 


இந்த தேவதையானது இடது புறம் இடுப்பில் ஒரு குழந்தையை வைத்து கொடு இருக்கும் ஒவ்வொருவர் தோட்டங்களிலும் காவல் தெய்வமாக இருந்து வருகிறது .இதற்கு ஒரு கருங்கல் நடப்பட்டு இதற்கு பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்திலே அதற்கு பொங்கல் வைத்து பலி கொடுத்து கொடை விழா போல சிறப்பாக நடத்துவார்கள் ஒவ்வொரு தோட்டங்களிலும் .

இந்த தெய்வத்தை வைத்து பல மாந்திரீக வேலைகளை  மாந்திரீகர்கள் செய்வார்கள் இந்த விஷயம் மிகவும் சூட்சமமான விஷயம் இது எனது தாத்தா முத்து பாண்டி வைத்தியர் கூறிதான் எனக்கு இதை போல பல விஷயங்கள் தெரிய வந்தது இப்போது கூட தினமும் பாடம் எடுப்பார் .

இசக்கி அம்மன் வசியம்  

இந்த இசக்கி அம்மனை வசியம் செய்து சித்தி செய்து கொண்டால் ஒருவர் குடும்பத்தை அளிக்க வேண்டும் என்று கூறினால் அந்த குடும்பத்திற்கு வரும் நல்ல விசயங்கள் யாவும் தடை பட்டு நிற்கும் நோய் நொடிகள் அதிகம் வரும் அவர்கள் வீட்டில் யார் மேலாவது ஆட்டம் வரும் சாமி ஆட்டம் ,இப்படி அந்த குடும்பத்தை உபத்திரம் செய்யும் .

இப்படி இந்த தேவதையை வசியம் செய்யாமலும் பல விஷயங்கள் செய்யலாம் அது ஒரு குறுப்பிட்ட தூரம் வரைதான் வேலை செய்யும் இந்த தேவதை வைத்து மாந்திரீக வேலை செய்வதால் இதற்கு வாரம் ஒரு முறை கோழி பலியிட வேண்டும் .சரியான தருணத்தில் கொடுக்க வில்லை என்றால் அந்த தேவதை நம் வீட்டில் உள்ளவர்களை நிம்மதியாக இருக்க விடாது .

ஏவல் செய்தால் இப்படித்தான் நடக்கும் 

இந்த தேவதை நமக்கு நல்ல முறையில் வேலை செய்யும் நாம் ஏவல் செய்த இடம் மிகுந்த பக்தி உள்ளவர்களாகவும் தெய்வ பலம் அதிகம் உள்ளவர்களாகவும் இருந்தால் அது மறு படியும் நம்மிடம் வந்து உபத்திரம் செய்யும் இந்த தேவதை வைத்து மாந்திரீகம் செய்தால் பல் இன்னல்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும் .

அதனால் பெரிய தெய்வங்களை நாம் சித்தி செய்து கொண்டால் நமக்கு எந்த பயமும் வேண்டாம் இந்த விசயங்கள் யாரும் வெளி விட மாட்டார்கள் நான் தான் நிறைய ஆன்மிக அன்பர்கள் சரியான குரு கிடைக்காமல் அல்லல் படுகின்றனர் அவர்களுக்கு இந்த விஷயங்கள் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் .

திருமண தடை நீங்கி நல்வாழ்வு அமைய ..

இப்போது தமிழகத்தை பொறுத்த வரையில் எல்லா குடும்பத்திலும் நம் மகனுக்கு நல்ல வரன் அமைய வில்லையே நாம் நினைத்த அளவிற்கு பெண் கிடைக்க வில்லையே? பையனின் வயது அதிகம் ஆகிக்கொண்டே போகின்றது .என்ன செய்யலாம் .


ஜோதிடர்கள் கூறினார்கள் என்று தோஷங்கள் எல்லாம் கழித்து விட்டோம் அதற்கு பிறகும் திருமணம் கூட வில்லையே என்று ஒவ்வொரு குடும்பத்தாரும் தத்தளிக்கின்றனர் .

அதி சரி செய்வதற்காக நாங்கள் அதற்கான யந்திரங்கள் தாயத்துக்கள் மஞ்சள் அல்லது திருநீறு குங்குமம் என்று பல முறைகளில் இந்த களத்திர தோஷத்தை களைவதற்கான எந்திரங்கள் இருக்கின்றன .அதன் படி நீங்கள் செய்தால் நிச்சயமாக 41 நாட்களுக்குள் நல்ல வரன் அமையும் என்பது உறுதி திரு முத்துபாண்டி வைத்தியர் அவர்கள் வாய் பேசாதவர்கள் ஊனமுற்றவர்களுக்கு கூட யந்திரங்கள் கொடுத்து பலருக்கு திருமணம் நடந்திருக்கிறது ..

உங்களது தோஷம் உங்களை விட்டு விலகி நின்றால் திருமண தடை எல்லாம் நீங்கி விடும் .அதற்கான முயற்சிதான் இந்த யந்திர பிரயோக முறைகள் .இதன் படி நீங்கள் வாங்கி அணிந்து பாருங்கள் .நிச்சயம் நல்ல வரன் அமையும் என்பது உறுதி 

திருமண தடைக்கான காரணங்கள் :

  • பெண்வீட்டார் என்றால் பெண்ணுக்கு கொடுக்க போதிய பணம் இருக்காது இதுவும் ஒரு வகையான திருமண தடைதான் இதையும் சரி செய்யலாம்
  •  
  •  நமது அந்தஸ்துக்கு தகுந்த கணவன் கிடைக்க வேண்டும் கிடைத்தாலும் அது எதோ ஒரு வழியில் தவறி போய் விடும்
  •  
  •  எவ்வளவோ தேடியும் அழகான குடும்பத்தில் பெண் கிடைத்தால் கடைசியில் ஜாதக பொருத்தம் இருக்காது
  •   
  • நமது ஊருக்குள்ளேயே நல்ல பெண் அமைந்தால் யாராவது நம்மை பற்றி தவறான விசயங்களை கூறி மனம் மாற்றி விடுவார்கள்
  •   
  • நாம் நேசித்த பெண்ணை திருமணம் முடிக்க வேண்டுமென்றால் அவர்கள் குடும்பத்திலோ அல்லது நம் குடும்பத்திலோ சம்மதிக்க மாட்டார்கள் .


இப்படி பல விதங்களில் தடை களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் ,இப்படி பட்ட தோஷங்கள் எல்லாம் நம்மிடம் பாதுகாப்பான நல்ல கதிர்வீச்சுகள் இல்லாத காரணத்தினால் தான் நம்மை வந்து தாக்குகின்றன .அதனால் நாங்கள் கொடுக்கும் யந்திரங்கள் கிரகங்களினால் வரும் பாதிப்புகளை அகற்றி நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் .

வாதை எனும் அதிதேவதை

எங்கள்  பகுதிகளில் இந்த வாதை  உலவுவதாகவும் அதனால் தான் வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும் .இப்போதும் கூறப்பட்டு வருகிறது .அதை வழிபாடு நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள் 


இதைப்பற்றி முத்துபாண்டி வைத்தியரிடம் கேட்டதற்கு இந்த விசயங்கள் அனைத்தும் உண்மைதான் வாதை எனும் தேவதை உண்மையிலேயே உண்டு அதற்கு தேவையானதை கொடுத்தால் நமக்கு தேவையான வேலைகளை அது செய்யும் .

எங்களது தோட்டம் சுமார் 5 ஏக்கர் சுற்றளவு இருக்கும் அந்த தோட்டத்தை சுற்றி 21 கற்கள் நடப்பட்டு இருக்கும் அந்த கற்கள் எதற்காக நடப்பட்டு இருக்கிறது என்று கேட்டால் அதுதான் வாதை இருந்த இடம் என்று கூறினார்கள் .

எங்கள் தாத்தாவின் அப்பா அவர் பெரிய மாந்திரீகர்தான் அவர் என்ன செய்தார் என்றால் கேரளாவிற்கு சென்று அங்கு உள்ள காணி காரர்கள் என்று கூறுவார்கள் அவர்கள் கேரளாவில் பெரிய மாந்திரிகர்கள் அவர்களிடம் இருந்து 21 வாதைகளை வாங்கி விட்டு அங்கிருந்தே நடந்து மேளம் அடித்து கொண்டே கொண்டு வந்து விட்டார் அதை எங்களது தோட்டத்தை சுற்றி 21 கற்கள் நட்டு வைத்து அதில் பிரதிஷ்டை செய்து பயன் படுத்தி வந்திருக்கிறார் 

இந்த வாதை தேவதையை ஏன் தோட்டத்தில் வைத்தார் என்றால் திருடர்கள் தோட்டத்திற்கு னுள்ளே வந்து விட்டு வெளியே செல்ல முடியாது ஏனென்றால் வழி தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காது அந்த தோட்டத்தில் இருந்து வெளியே செல்வதற்கான வழி அவரால் கண்டு பிடிக்க முடியாது இப்படி இந்த வாதையானது அவர்களின் கண்ணை மறைத்து விடும் .

அப்போது இந்த  21வாதிகளுக்கும் வாரம் ஒரு முறை கோழி பலியிட்டு படையல் வைத்து பயன் படுத்தி வந்திருக்கிறார் 

இந்த வாதை தான் வாகனங்கள் ஓட்டி செல்லும் பொது திடீர் என்று நம்மை அறியாமல் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம் இந்த வாதை தான் வாகனங்கள் ஓட்டுபவரின் சிந்தையை மயக்கி என்ன நடந்தது என்றே தெரியாத அளவிற்கு செய்து விடும்  

ரகசிய மூலிகை பிரயோகம்

உலகத்தில் உள்ள ஒவ்வொரு மூலிகைகளுக்கும் சாபம் உண்டு ,அதைப்போல ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு.மனிதன் தன்னுடைய தன்மையை குணத்தை அடிக்கடி மாற்றி கொண்டே இருப்பான் அவனால் ஒரு சரியான தன்மையால் இருக்க முடியாது .அப்படி ஒரே தன்மையோடு இருந்து விட்டான்ஆனால் அவன் பக்குவமடைந்த மனிதனாக மாறிவிடுகிறான் .மூலிகைகள் தன்னுடைய குணத்தை எப்பொழுதும் மாற்றுவதில்லை .


அதனால் தான் மனிதனால் ஆகாத காரியங்கள் கூட மூலிகை வைத்து செய்தால் எளிதில் வெற்றியடையலாம்  மூலிகையை காப்புக்கட்டி எடுப்பதனால் அதன் உயிர் அதன் வேரிலே தங்கி அதனுடைய தன்மையை வெளிக்காட்டுகிறது .

அக்காலத்தில் எந்த மூலிகை என்ன செய்யும் என்று ஆராய்ந்து பார்த்து அதற்கான மூலிகையை வைத்து பல காரியங்கள் செய்தார்கள் .அதுதான் மூலிகை வித்தைகள் ,மை வித்தைகள் ,யந்திரங்களோடு மூலிகை வேறை பயன்படுத்து காரியமாற்றுதல், வெறும் மூலிகை யிலே மந்திர உரு ஏற்றி மோதிரம் அல்லது தாயத்து கட்டுதல் என்று பல சூட்சமமான விசயங்கள் இந்த இந்த மூலிகை வித்தையில் உள்ளது 

வெறும் மூலிகையில் உருவேற்றும் பொது அதில் மந்திர உருக்கள் தங்க வேண்டுமானால் அதற்கு அஷ்ட கர்மங்களுக்கும் ஒவ்வொரு வகை நூல் உள்ளன அந்த நூல்களை சுற்ற வேண்டும் ஜெபிக்கும் பொது சுற்றிகொண்டே ஜெபிக்க வேண்டும் அப்படி ஜெபித்தால் நாம் ஏற்றிய மந்திரங்கள் அந்த நூலிலேயே தங்கி நல்ல பலனை நமக்கு அழிக்கிறது .

நான் திரு முத்து பாண்டி வைத்தியர் என் தாத்தாவின் உதவியோடு மிகவும் ஸ்டையில் ஆக கையில் அணிய மோதிரம் கயிறுகள் கழுத்தில் அணிய தாயத்து தயாரித்து உபயோகிக்கிறேன் .அதனால் வெளியில் சென்றால் நல்ல மரியாதையும் நான் பேசுவதை சபையில் எல்லோரும் கேட்பார்கள் என்னை சுற்றி எப்போதும் பத்து பேர்கள் இருப்பார்கள் அவ்வளவு வசீகரம் அந்த பொருட்களுக்கு பெண்களும் நல்ல மரியாதையும் கொடுப்பார்கள் .

உங்களுக்கும் வேண்டுமானால் கேளுங்கள் செய்து தருகிறேன் என்ன தேவைக்காக என்று மட்டும் கூறுங்கள் வீட்டில் நிறைய மூலிகை வேர்கள் உள்ளன .அதிகமாக ஜோதிடர்களுக்குதான் கொடுத்து வருகிறோம் .

ஆண் பெண் வசிய மருந்து (இடு மருந்து)

வசியமருந்து முறையை பயன் படுத்தி அதிகமானோர் வயிற்று பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள் அது எப்படி என்றால் யாராவது வயிறுவலி என்று வந்தாலே அவர் உடம்பில் மருந்து உள்ளது .அதை எடுக்கிறேன் என்று கூறி பணம் வாங்குகின்றனர் .

அதாவது குடலில் ஒட்டிகொண்டிருக்கும் பொருளை குழல் வைத்து உறுஞ்சி எடுப்பது என்பது சாத்தியமா அது சாத்தியமல்ல .. அதை எடுக்க வேண்டுமானால் தக்க சித்த மருந்து வகைகளை உண்டால் மட்டுமே எடுக்க முடியும் .இல்லைஎன்றால் பேதி மாத்திரை சாப்பிட்டாலும் அது வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன .

உடலில் மருந்து இருக்கிறது என்று கண்டறிவது எப்படி?

உடலில் மருந்து இருந்தால் எப்படி கண்டு பிடிக்க வேண்டுமேன்றால் பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு ஓன்று நாம் அன்றாட உணவில் வைத்து உண்ணும் பாகற்காய் ஓன்று ,மற்றொன்று பாகற்காயின் இலையானது கொஞ்சம் சிறியதாக இருக்கும் அதுதான் மிதி பாகற்காய் அந்த மிதி பாகற்காய் இலையில் சாறு பிழிந்து உள்ளங்கையில் ஊற்றினால் அந்த சாரானது வற்றி விட்டால் அந்த உடலில் மருந்து இருக்கிறது என்று உறுதி செய்து கொள்ளலாம் .அது அப்படியே நீர் போல வற்றாமல் இருந்தால் அந்த உடம்பில் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்.

வசியம் :

இப்போது பொதுவாகவே வசியம் என்றாலே எல்லோரும் இடுமருந்து கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .இந்த இடுமருந்தானது எல்லோருக்கும் வேலை செய்யாது .பலகீனமானவர்களுக்கு அந்த மருந்தானது வேலை செய்யும் 

உடற்பயிற்சி யோகா இப்படி பட்ட பயிற்சி செய்து வருபவர்களுக்கு இம்மருந்து சரியாக வேலை செய்யாது .

அதைப்போல மது அருந்துபவர்களுக்கும் அது வேலை செய்யாது .

இடு மருந்து எவ்வாறு வேலை செய்கிறது ?

இந்த மருந்து தயாரிப்பதற்கு எங்களிடம் பல முறைகள் உள்ளன .அம்மருந்தானது ஒரு சில மூலிகைகளை கொண்டு தயார் செய்யப்படுகிறது அதில் யாருக்கு வசியப்பட வேண்டுமோ ,அவர்களுடைய ஆளுக்கு ,அல்லது மூத்திரம் அல்லது வித்து இவைகளை அம்மருந்தில் கலந்து கொடுக்கும் பொது .இவருடைய வாடை பட்ட உடனேயே எதோ ஒரு மோகம் அவர் மேல் ஏற்பட்டு விடுகிறது .

இது பழைய முறைதான் இந்த முறையை பயன் படுத்திதான் கண்ணவன் உண்ட இலையிலே மனைவியை எச்சில் சாப்பாட்டை சாப்பிட சொல்வார்கள் 
அதுவும் இருவரும் அன்யோன்யமாக வாழத்தான் 

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,...

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர். .

அருள்வாக்கு குறி சொல்ல

குறி சொல்வதற்கு என்ன செய்ய வேண்டும் 

குறி சொல்வதென்பது ஒருவர் நம்மிடம் அவருடைய பிரச்சனைகளை பற்றி கேட்க வந்திருக்கிறார்கள் என்றால் அவர் இந்த காரியத்தைப்பற்றி கேட்கத்தான் வந்திருக்கிறார் என்று உறுதியாக கூற முடியும் 


இப்போது குறி சொல்வது என்பது அதிக மாக ஜோதிடர்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள் ஜோதிடர்களுக்கு ஓர்ளவு குறி சொல்கிற பக்குவம் இருந்தால் மட்டுமே எதிரில் இருப்பவர் இன்ன காரியத்திற்காக வந்திருக்கிறார் என்று உறுதியாக கூற முடியும் .

குறி சொல்வதற்கு நிறைய உபாசனைகள் இருக்கின்றன .எல்லா உபாசனைகளும் கடந்த காலம் நிகழ்காலம் சொல்லும் ஆனால் எதிர்காலம் பற்றி உறுதியாக கூற முடியும் எதிர் காலம் பற்றி உறுதியாக சொல்ல வேண்டுமானால் அவர்களிடம் அனுமன் உபாசனை இருந்தால் மட்டுமே உறுதியாக கூற முடியும் .

எனது தாத்தா முத்துபாண்டி வைத்தியர் அவர்கள் அனுமன் உபாசனையால் தன்னை தேடி வருகிறவர்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் நீ இந்த காரியத்திற்காக என்னை தேடி வந்திருக்கிறாய் .

இன்னும் இத்தனை நாட்களுக்குள் உன்னுடைய பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்று உறுதியாக கூறுவார் .அவரும் பல குறி சொல்லும் முறைகளை கையாண்ட பிறகு அனுமன் உபாசனைதான் குறி சொல்வதற்கும் மற்ற எல்லா காரியங்களுக்கும் சிறந்தது என்று கூறுகிறார்கள்.இப்படித்தான் அக்காலத்தில் உள்ளவர்கள் எல்லோரும் முன் கூட்டியே நடக்க விருப்பத்தை தெரிந்து கொண்டு அதன் படி செயல் படுவார்கள் .

குறி சொல்வதால் மற்றவர்கள் மனதில் இருப்பதை எளிதில் கண்டறிய முடியும் 
யார் யாரெல்லாம் எதை விரும்புகிறார்கள் என்பது தெரிய வரும் 
நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்தி விட முடியும் 
அருள்வாக்கு சொல்வதற்கு பயன் படும் 
ஜோதிடம் சொல்ல பயன் படும் 
நாடி ஜோதிடம் சொல்ல பயன் படும் 
பிரசன்னம் பார்க்க பயன்படும்  

அற்புத சஞ்சீவி வேர்

சஞ்சீவி வேர் என்று பரவலாக விற்கப்படுகிறது. உண்மையில் அது சஞ்சீவி வேர் தானா என்று யாருக்கும் தெரியாமலே வாங்குகிறார்கள். சஞ்சீவி வேர் இறந்தவரையே உயிர்பிக்கும் மருந்து என்று நாம் அனைவருக்கும் தெரியும். இந்த வேரை வாங்கியவர்கள் யாரும் உயிருடன் இருக்கிறார்களா என்றால் அந்த மாதிரி யாரும் இல்லை.  அப்படி இருக்க இப்பொழுது விற்க்கப்படும் வேர் உண்மையில் சஞ்சீவி வேர் இல்லை. 

வேறு ஏதோ வேரை விற்கிறார்கள்.  அனுமன் கூட அந்த வேரை மறந்துவிட்டு மலையையே எடுத்துக்கொண்டு போனவர் என்று படித்து இருக்கிறோம் அந்த வேரைப்பற்றி தெரிந்த ஆள் சுக்கிராசாரியார் தான். அந்த வேரை அப்பொழுதே மறைத்துவிட்டார்கள். இன்று தேடினால் கிடைக்காது. சஞ்சீவி வேரை எடுப்பதற்க்கு ஒரு வழி இருக்கிறது அது என்ன வழி என்று உங்களுக்கு சொல்லுகிறேன். 

மரங்களில் பருந்து கூடு கட்டும் அந்த கூட்டில் குஞ்சுகளை வளர்க்கும்.  அந்த குஞ்சுகளின் காலை நீங்கள் இரும்பு கயிற்றால் கட்டிவிட வேண்டும். தாய் பருந்து வந்து குஞ்சுகளை பார்த்துவிட்டு அந்த இரும்பு கயிற்றை அவிழ்க்க பல முயற்சிகள் செய்யும் கடைசி வரை இரும்பு கயிறு அறுபடவில்லை என்றால் கடைசியில் அந்த பருந்து போய் ஒரு வேரை எடுத்து வரும் அந்த வேரை கொண்டு வந்து குஞ்சுகள் இருக்கும் கூட்டில் போட்டுவிடும் அந்த இரும்பு கயிறு அறுந்துவிடும். 

அந்த குஞ்சுகளை அவை அழைத்துக்கொண்டு சென்றவுடன் அந்த கூட்டை அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஒடுகின்ற தண்ணீரில் போட்டால் அதில் ஒரு குச்சி மட்டும் ஒடுகின்ற திசையில் எதிரே வரும் அந்த வேர் தான் சஞ்சீவி வேர்..

ஜன வசியம் தரும் தன வசிய யந்திரம்

இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், லட்சுமி வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.

        ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தன்வசிய எந்திரம். இத்துடன் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான வெள்ளை விஷ்ணு கிரந்தி ,வெண் சங்கு புஷ்பம் வைத்து எந்திரம் தயாரிக்கிறோம்.

           இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை. இதனால் சமூகத்தில் அணிந்திருப்பவர் மேல் தனிப்பார்வையும் நல்ல பெரும் இருக்கும் தேவைபடுவோர் அணுகவும் .

அதிஷ்டங்களை அள்ளித்தரும் கருணை கல்

நாம் அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதில் இராசி கற்களையும், நவரத்தினங்களையும், உபரதினங்களையும் அதன் குணங்களையும் கேட்டும் படித்தும், அனுபவத்தில் வாங்கி உபயோகப்படுத்தியும் இருப்போம்.நவரத்தினங்கள் என்பது மாணிக்கம், முத்து, புஸ்பராகம், கோமேதகம், வைரம், மரகதம், வைடூர்யம், நீலம், பவளம் ஆகும். உப இரத்தினங்கள் என்பவை டோபாஸ், அமிதிஸ்ட், சன் ஸ்டோன், மூன்ஸ்டோன், கார்னெட், டைகர்ஸ் ஐ, ஜிர்கான் போன்றவைகள் ஆகும். இந்த கற்கள் எல்லாம் ரசியின்படியும், எண்கணிதத்தின் படியும் ஜோதிடர்களால் நமக்கு சொல்லப்படும் கற்களாகும். இவைகள் கிரக ரீதியில் வரும் கேடு பலன்களை குறைத்து நமக்கு நல்ல பலன்களை வழங்குவதற்காக இறைவனால் உண்டாக்கப்பட்டது ஆகும்.

                ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது வளமான வாழ்வு தரும் கருணை கல். இது உலகிலேயே கிடைப்பதற்கு அரிதான அறிய அற்புதமான கல் ஆகும். உலகம் முழுவதும் பல கல கட்டங்களில் பல சித்தர்களும், ஞனிகளும் தோன்றி பல அற்புதங்களை செய்துவந்ததை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். இவ்வகையில் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மலையில் ஒரு அபூர்வ சித்தர் பல ஆண்டு காலமாக கடும் தவம் இயற்றி வந்தார். பலகாலமாக தவம் செய்து வந்த அந்த சித்தரின் சக்தி முழுவதும் அவர் அமர்ந்து தவம் செய்த அந்த மலை முழுவதும் வியாப்பித்து பரவியது. அந்த சித்தர் பல சித்திகளை பெற்று இறுதியில் அந்த மலையிலேயே ஜீவ சமாதி அடைந்தார்.
      
                   அந்த சித்தரின் சக்தி எல்லாம் ஒன்று கூடி பாதரசம் போல மாறி அந்த மலை முழுவதும் இருக்கிறது. வருடத்தின் ஒரு குறிப்பிட்ட புனிதமான நாளில் இது மலையில் இருந்து வெளியில் வருகிறது. இந்த பாதரசம் போன்ற திரவமே முன்பு நான் குறிப்பிட்ட வளமான வாழ்வு தரும் கருணை கல் ஆகும். பாதரசம் போன்ற திரவம் எப்படி கல்லாகும் என்ற கேள்வி எழலாம்.

                      இது எப்படி சாத்தியமாகிறது என்றல் அந்த மலையில் இன்றும் பல தவ சீலர்கள் தன்னலம் இன்றி ஆசா பாசங்களை துறந்து தவம் செய்து வருகிறார்கள். இவர்களை புத்தாஸ் (சித்தர்) என்று அங்கு அழைக்கிறார்கள். அந்த பாதரசம் போன்ற திரவம் வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் வெளிவரும் போது சில மந்திரங்களை பிரயோகம் செய்கிறார்கள். அந்த மந்திரங்களின் சக்தி பாதரசம் போன்ற திரவத்தை கல்லாக மாற்றுகிறது. பொதுவாக எந்த கற்களும் காந்தத்தில் ஒட்டுவதில்லை. ஆனால் இந்த அற்புத கல் காந்தத்தில் ஒட்டுகிறது. இத்தகைய அற்புத கல்லை ஒரு வருட காலம் போராடி அந்த அற்புத மலையில் தவமியற்றும் புத்தாஸ் (சித்தர்) இடம் பெற்றோம்.

                      இந்த அற்புத கல்லின் சக்தி என்ன?  இந்த கல்லை நாம் உடலில் அணிவதால் தெய்வங்கள் நமக்கு வசியமாகும். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நம்முடன் தெய்வங்கள் இருந்து வழிநடத்தும், அந்த செயல்கள் அனைத்திலும் வெற்றியை பெற்று தரும். இந்த அற்புத கல் ஜன வசியம், தன வசியம், தொழில் வசியம், புகழ், மேன்மை, வெற்றி, பாதுகாப்பு தருகிறது. இந்த அற்புத கல்லின் சக்தியை சொல்ல வார்த்தைகளில் அடங்காது. இந்த கல் நமது வாழ்வை வளமானதாக மாற்றுகிறது. தாய்லாந்தில் இந்த கல்லை நாம் பெரும் போது அந்த சித்தரிடம் இதனை பெறும்போது இந்த கல்லின் பெயரை கேட்டபோது தாய்லந்து வார்த்தையில் ஒரு பெயரினை சொன்னார். அதன் தமிழாக்கம் கருணை கல். அதாவது இந்த கல்லை நாம் அணிவதால் இறைவனின் கருணையுடன் நமக்கு உதவுவார்.  இந்த வளமான வாழ்வு தரும் கருணை கல் இந்த ஆண்டு 17 கற்கள் இறைவன் திருவருளால் எனக்கு கிடைத்தது. இந்த அற்புத கற்கள் பிராப்தம் உடையவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தேவைப்படுவோர்  உடனே தொடர்பு கொள்ளவும்

செல்வ செழிப்போடு வாழ பின்பற்ற வேண்டியவை

1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித
ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.
இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை
காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு
வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு
அதிகரிக்கும்.
9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது
குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால்
பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர்
கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்
.45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு,
பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம்
வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக
பணம் வரும்.
17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள்
அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் 
விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி
ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம்
இல்லாதவர்
கூட லட்சாதிபதி ஆகலாம்.
21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு 
ஆகாது.
22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில்
லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி
நித்தமும் வாசம்செய்வாள்.
24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து 
உண்டாகும்.
25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு 
அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் 
சேர்ந்துகொண்டே இருக்கும்.
27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை 
பெறலாம்.
28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை
மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை 
அணிவித்திடபணம் குவியும்.
31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் 
குவியும்.
32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் 
ஆகர்ஷணம் ஆகும்.
35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி 
தெளித்திடசெல்வம் சேரும்.
36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் 
சேரும்.
38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட
லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க
ஐஸ்வர்யம் பெருகும்.
41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம்
கிடைக்கும்.
43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் 
முன்னேற்றம்ஏற்படும்.
45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் 
ஏற்படும்.
47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண 
லாபம்கிட்டும்.
50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி 
வளம்பெருகும்.
51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து
மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து
மடங்குநம்மிடம் வந்து சேரும்.
54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை
தினமும்அணிந்து வர பணம் வரும்.
55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ்
கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம்
ஆகும்.
57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி
கடாடசம்நிரந்தரமாகும்.
58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம்
நீங்கிதனலாபம் பெறலாம்.
59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து 
வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து
வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட
ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை
வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு
33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம்
செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி
இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.