Friday 24 June 2016

மாந்திரீக பயிற்சி


 வாழ்வை வளமாக்கவும், நடைமுறை துன்பங்கள் நீங்கவும்,தெய்வபலத்துடன் நாம் சிறப்பாக வாழவும், பொதுமக்கள், ஜோதிடர்கள், பூசாரிகள், குறிசொல்பவர்கள், ஆன்மீகவாதிகள், மாந்திரீகம் தொழில் செய்ய நினைப்பவர்கள், இப்பயிற்ச்சியை முறையாக தெரிந்து, 7 நாளில் இருந்து 21 நாளில் தெய்வசத்தி நம்மிடம் இருப்பதை உணரலாம்.

     நாம் விரும்பும் தெய்வங்களான கணபதி, ஆஞ்சநேயர், மாடன், காளி, வராஹி, பைரவர், மோகினி, குறளி, குட்டிச்சாத்தான், யட்சினி, தூமாதேவி, சூலினி, பகவதி, ருத்திரி, காட்டேரி, சுப்ரமணியர், நாகதேவதை,கருப்புசாமி,முனீஸ்வரர்,அங்காள அம்மன், ரேனுகாதேவி போன்ற தெய்வங்களை நம்மிடம் வரவழைத்து நட்பு கொண்டு, அதன் மூலம் நம் தேவைகளையும், பூர்த்தி செய்வதுடன், நம் துன்பம், நம்மைச்சார்ந்தவர்கள் துன்பத்தையும் விலக்கிக்கொள்ளலாம். 

 தேவதா சித்தியடைய பூஜை ஜெபமுறை, யந்திரம், மூலிகை, மை, மந்திரமுறைகளும், நெய்வேத்தியம், படையல்,ஹோமம்,பலிமுறைகளும்,தெய்வ தேவதா நம்முடன் தொடர்பு கொள்ளும் முறைகளும்

   நாம் முறையாக சித்தி செய்த தெய்வ தேவதாவின் துணையுடன், நமது துன்பம்,நம்மைச்சார்ந்தோர் துன்பத்தையும்,முறையாக நீக்கும் அஷ்டகர்ம வித்தையாகிய, வசியம், மோகனம், ஆகர்சனம், வித்துவேசனம், ஸ்தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் போன்றவற்றின் செயல் உபயோகம் விளக்கம், பயன்பாடு,  எளிய பிரையோக வித்தைகள், அருள்வாக்கு குறி சொல்லும் முறை, முக்காலம் உணரும் முறைகளும் சித்திசெய்த தேவதையுடன் அடுத்து அதனுடைய பரிவார தேவயையும் நட்புகொள்ளும் முறை, இதன்மூலம் தெய்வ நிலை அடையும் வழிமுறை, மரனமில்லாப்பெருவாழ்வு நிலையுடன் ஞான நிலையும் அத்துடன் நம் ஜீவனை ஒளியாக மாற்றும் வித்தையும் முறையாக போதிக்கப்படும்.
தெய்வ உபாசனை செய்பவர்களை துன்பம், தரித்திரம், கண்திருஷ்டி, செய்வினை, கர்மவினை, கிரக தோசம்,  துஷ்டசக்தி நெருங்காது.
தெய்வ சக்தியால் நம் இல்லம், தொழில், வியாபாரம் செய்யும் இடம்,லாபத்துடன்          விருத்தியடையும்
தெய்வ துணையால் எதிரி, எதிர்ப்பு, போட்டி, பொறாமை, நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம், ஏமாற்றுபவர், தொல்லை தருபவர்,முகம் தெரியாத எதிரியும் நமக்கு கேடு நினைப்பவர்களும் அவர்களாக விலகி விடுவார்
வேதரிஷிகளும், சித்தர்களும் நமக்கு அளித்த அபூர்வ கலை
இதுவரை பலருக்கு அனுபவ தேவதா சித்தி பயிற்சி வழங்கி பலன் பெறச் செய்துள்ளோம்
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார். அளித்த அபூர்வ கலை       
 நீங்கள் விரும்பும் தெய்வ, தேவதா சித்தி முறைகள், முறையான பூஜை முறை, மந்திர, யந்திர, தியான முறை, மை முறையில் வர வைத்தல்.

o   யார் உடலுக்கு எந்த தெய்வ, தேவதா சித்தி ஆகும் என்பதை ஜாதகம், நாடி, தேகக் கூறு, வாழ்க்கை முறை போன்றவற்றின் மூலம் ஆய்வு செய்து, தேவதா சித்தி பயிற்சி அளிக்கப்படும்
.
o   கணபதி, காளி, வராஹி, பைரவர், மாடன், காட்டேரி, ஜீன், இசக்கி, மோகினி, யட்சினி, யோகினி, டாகினி, சாகுனி, குறளி, குட்டிச்சாத்தான், தூமாதேவி, கருப்பணசாமி, இருளப்பன், அனுமார், பேச்சி, சூலினி, பகவதி, சண்டி, ருத்ரி, சுப்ரமணியர், நாகதேவதை, புவனை, வாலை, திரிபுரை, மனோன்மணி போன்ற தெய்வ சித்தி முறைகள்.

o   கரு, உரு, குரு முறைகள், வாக்கு சித்தி, அருள் வாக்கு பயிற்சிகள், ஜாலபயிற்சிகள், முக்கால குறி சொல்லும் பயிற்சிகள், வெற்றிலை,தேங்காய் குறிமுறை, சோழி பிரசன்ன முறைகள்.

o   முறையான மாந்த்ரீக அஷ்டகர்ம வித்தை, வசியம், மோகனம், ஆகர்ஸனம், வித்துவேசனம், உச்சாடனம், பேதனம், ஸ்தம்பனம், மாரனம் போன்றவை அடிப்படையிலிருந்து பிரயோக முறைகள்.

o   அஷ்டகர்ம பிரயோகம், அஸ்திர பிரயோகம், பார்வை பிரயோகம், பிரம்மாஸ்திர பிரயோகம், கெடர்தள பிரயோகம், கருட பிரயோகம், விருட்ச பிரயோகம், பஞ்சபூத பிரயோக முறைகள், ஆத்ம பிரயோகம் போன்ற பிரயோக முறைகள்.

o   மந்திர பிரம்பு, யந்திரம், தாயத்து, எலுமிச்சம்பழம், தேங்காய், முட்டை, தண்ணீர், பூ, குங்குமம், போன்றவை மந்திரித்து உயிர் உண்டாக்கி பயன்படுத்துவது.

o   யாகத்தின் மூலம் தெய்வ, தேவதைக்கு உணவளித்தல், தெய்வ, தேவதை, ஆவிகளை உடம்பில் இறக்கும் முறைகள், பேய் ஓட்டும் முறைகள்.

o   கிரக தோசம், ஏவல் தோசம், தரித்திர தோசம், மாங்கல்ய தோசம், பித்ரு தோசம், பூர்வ புண்ணிய கர்மம், சகல தோசம் நிவர்த்தி முறை, கழிப்பு கழிக்கும் முறை, செய்வினை, ஏவல் அகற்றும் முறைகள்.

o   பஞ்சபட்சி, சரம், ஓரை நாளறியும் விதம்.

o   மூலிகை, புல்லுருவி முறையாக சர்வ நிவர்த்தி, காப்பு கட்டுதல், உயிர் உண்டாக்கி பயன்படுத்தும் முறைகள்.

o   பறவை அஞ்சனம், பாதாள அஞ்சனம், குறி அஞ்சனம், அஷ்டகர்ம அஞ்சனம், சைவ அசைவ முறை, அரைத்து உயிர் உண்டாக்கி பயன்படுத்தும் முறைகள்.

o   இங்கு கலை அழியாமல் பாதுகாக்கவும், தகுதியானவர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்துடன் கற்பிக்கப்படுகிறது.

Thursday 23 June 2016

குடியை மறக்க மந்திரம்


இன்றைய நவீன உலகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு ஆண்களும் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தன் உடலையும், மனதையும், நல்ல குடும்ப வாழ்வையும், பொருளாதார சூழலையும் கெடுத்துக்கொண்டு வாழ்வே சுன்யமாக்கி கொண்டு வாழ முடியாமல் அவதிபடுவோர் பலர்.

அவர்களின் வாழ்வை வளமாக்கவே இதனை எழுதுகிறேன். ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் ஓங்காரம் (ஓம்) வரைந்து அதன் நடுவில் சூலம் வரைந்து அதன் மேல் எலுமிச்சம் பழம் வைத்து

மந்திரம் 

" ஓம் மனோ விகார மனோ நாச குரூர சக்தி நாசய நாசய ஹூம் பட் சுவாக"

- 1008 உரு செபித்து உள்ளுக்கு விபூதியை சாப்பிட கொடுக்க ஆயுள் உள்ளவரை குடியை மறந்து விடுவான்.

ராசிக்குரிய மந்திரங்கள்



மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்! 


ஷண்முகம் பார்வதீ புத்ரம் க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத் மஜம் 

ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும். 

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ 

மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: 

கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும். 

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம: 

சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும். 

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம: 

கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும். 

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம: 

துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும் 

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம: 

விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும். 

தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரதம் குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம். 

தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும். 

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம: 

மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும். 

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம: 

கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும். 

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம: 

மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும். 

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

Wednesday 22 June 2016

சகல தேவர்களையும் வசியம் செய்ய


வசியக்கலையில் 
  1. ஜன வசியம்
  2. ராஜ வசியம்
  3. ஸ்திரி வசியம்
  4. புருஷ வசியம்
  5. தேவ‌ வசியம்
  6. சத்ரு வசியம்
  7. மிருக‌ வசியம்
  8. லோக வசியம் 


என எட்டு வகை உண்டு. அவற்றில் தேவர்களை வசியம் பண்ணும் முறைகளில் ஒன்றினை பார்க்கலாம்.

மந்திரம்

ஓம் அம் அம் றீம் உம் யிம் வசி சுவாஹா.

பூஜை முறை 

வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான அறையில் வெற்றிலையில் விபூதி பரப்பி உரு நாளொன்றுக்கு 1008 வீதமாக 48 நாட்கள் செய்ய வேண்டும். பால், பழம், சக்கரைப்பொங்கல்,புஷ்பங்கள், கற்பூரம், ஊதுபத்தி ஆகியன வைக்கவும்.பூசை செய்து விபூதியை அணிந்து கொண்டால் சகல தேவர்களும் வசியமாவார்கள்