Saturday 15 July 2017

கருங்குட்டி உபாசனை :

கருங்குட்டி உபாசனை :

இந்த கருங்குட்டி உபாசனை வைத்திருப்பவர்கள் அவர்கள் நினைத்த காரியத்தை எளிதில் சாதித்து விடலாம் .அவர்களுக்கு எதிரியே இருக்க மாட்டார்கள் .எதிரியை இல்லாமல் செய்து விடும் .

முத்து பாண்டி வைத்தியருடைய தகப்பனார் இந்த கருங்குட்டி உபாசி கொஞ்ச நாட்கள் வைத்திருந்தார் அதற்கு பிறகு இந்த உபாசனையால் தனது தேவைக்காக ஒரு சில காரியத்தை செய்து விட்டு அதன் எதிர் விளைவுகள் நமது குடும்பத்தை தாக்கும் இந்த குட்டியை ஏவல் செய்து விட்டால் அதில் ஒரு சில ஏவல் மறுபடியும் திருப்பி நம்மை வந்து தாக்கும் ,நாம் பலமானவர்களாக இருப்பதனால் நமது குழந்தை குடும்பம் என்று அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அதனால் அவர் இளமைக்காலத்தில் பயன் படுத்தி இருக்கிறார் .ஒரு சில பாதிப்புகளுக்கு பிறகு விட்டுவிட்டார் .

கருங்குட்டி என்னவெல்லாம் செய்யும் :

இந்த கருங்குட்டி வைத்து ஒரு பொருளை நாம் கையால் தொட்டு விட்டு வந்தால் போதும் அந்த பொருள் அன்று இரவே நம் வீட்டில் இருக்கும் அந்த காலத்தில் களவு செய்வதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் .

அப்போது நெல் அறுவடை செய்து களத்திலே போட்டிருப்பார்கள் அந்த நெல்லில் ஒரு பிடியளவு கையில் எடுத்து வந்தால் இந்த குட்ட்யானது ஒரு மூடை நெல் கொண்டு வந்து கொட்டி விடும் .

இந்த கருங்குட்டியை அந்த காலத்தில் கேரளத்தில் அதிகமானோர் பயன் படுத்தி வந்ததாகவும் அங்கிருந்துதான் வாங்கியதாகவும் கூறினார்கள் .இப்போதும் கூட ஒரு சில இடங்களில் பயன் படுத்தப்பட்டு வருகிறது .தமிழகத்திலும் மலைஜாதியினர் பயன்படுத்துகின்றனர் .இதைவைத்து ஜால வித்தைகள் அனைத்தும் ஆடலாம் .வசியம் பிரிவு அழைப்பு வித்தைகளையும் செய்யலாம் .

கேரளத்தில் இந்த குட்டியை வைத்து உபாசனை செய்பவர்கள் ஊர்ப்புறங்களில் வசிப்பதில்லை காடுகளில்தான் வாழ்கிறார்கள். இதற்கான மந்திர யந்திர பிரயோகங்கள் கூட எட்டில் எழுதப்பட்டிருந்தன. மாந்திரீகத்தில் இந்த கருங்குட்டி நினைத்ததை சாதிக்க பயன்படுகிறது . இதனால் ஜென்ம வினை அதிகரிக்கிறது. இந்த கருங்குட்டி உபாசனையை பயன்படுத்தினால் நிகழ்காலத்தில் நாம் நினைத்த வண்ணம் வளமோடு வாழலாம் . 



கைக்கருப்பு என்ற குட்டி:

சூதாட்டத்தில் தினம் பல கோடிகணக்கில் சூதில் பணம் கிடைக்கின்றன நாம் அண்டை நாடுகள்ளன மலேசியா,சிங்கப்பூர்,சீனாவில் சூதடத்தில் தினம் பல கோடிகணக்கில் சூதில் பணம் கிடைக்கின்றன.

இந்த சூதில் சீனர்கள் பலகோடி பணம் தினம் அடிகின்றனர் . இதற்கு முக்கியமான காரணம் அவரிடத்தில் உள்ள மந்திரக சக்திதான் முக்கிய காரணம். இந்த சக்தி என்னவென்று தெரியுமா. நம்முடைய சாஸ்திரத்தில் மறைக்கபட்ட  அதிபயங்கர தேவரகசியம் கைகருப்பு என்னும் அதிக சக்தி கொண்ட மாந்திரீக  சக்தி தான் .

கைக்கருப்பு என்றால் என்ன 

பல உயிரினங்கள் கரு சக்தி கொண்டு மந்திர யந்திர மூலிகைகள் பிரயோகம்  மூலமாக மாந்திரீக குருக்கள் தங்கள் தவசக்தியை பயன்படுத்தி ஒரு அதிசய உயர்ந்தசக்தியை படைப்பார்கள். இந்த மாந்திரீக மகா உயரின சக்தி கைக்கருப்பு ஆகும்.  இந்த கைக்கருப்பு மிக வலிமையான பலம் படைத்தது. கைகருப்பு ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருளை கொண்டு செல்லும்.பூ ,பழம் குங்குமம். ஆகியவையும் தரும். சூதில் நாம் நினைத்த ஒரு இடத்தில் பகடையை வைக்கும் . அனைத்து செயல்கள் செய்யும்

பலவகையான கைக்கருப்பு உள்ளது

பொளிவாரி கருப்பு
தவாசு கருப்பு
தானிய கருப்பு
பஞ்சமல கருப்பு
குட்டி கருப்பு
மலக் கருப்பு


இந்த வகையான கைக்கருப்பு   உணவு முறைகள் படையல் முறைகள் வேறுபடும் சில கைக்கருப்பு அசைவம், சைவம் என இருவகைப்படும் சைவகருப்பு அவுல் ,பொறி ,கடலை,பன்னீர் முதலியவைகள் அசைவகைக்கருப்பு கோழி இறைச்சி, மாடு இறைச்சி, பன்றிகள் இறைச்சி போன்ற உணவு முறைகள்.

No comments:

Post a Comment