Friday 25 March 2016

மாந்திரீக பூஜை முறை

LESSON 4



மாந்திரீகம் பயிலும் அனைவருக்கும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும் அது என்னவென்றால் நாம் செய்யும் பூஜைகள் சரிதானா இல்லை பூஜையில் எதாவது குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டதா என்று .அதற்காகத்தான் நாம் முறையாக என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் .

நான் மாந்திரீக பாடத்தை இப்படி வெளிப்படையாக கொடுப்பது எதற்கு என்றால் பொதுவாக தமிழ்நாட்டில் நிறையபேர்கள் மாந்திரீகம் என்ற பெயரிலே பலரை ஏமாற்றி வயிறு பிளைத்துகொண்டிருகிரார்கள் ஆகவே அவை அகல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாந்திரீகப்பாடம் இலவசமாக கொடுத்து வருகிறோம் .நாங்கள் பரம்பரை மாந்திரீகர்கள் அந்த காலத்திலேயே எனது தாத்தா கேரளாவில் சென்று பயின்றதை எனது தகப்பனார் அவரது வழியில் நானும் பின்பற்றி வருகிறேன் .இதனால் நான் பயின்ற பாடங்களில் ஓரளவு பாடங்களை ஒளிவு மறைவின்றி கற்று தருவேன்  .மாந்திரீகத்தில் ஒரு சில பாடங்கள் மட்டும் நான் தட்சனை வாங்குவேன் ஏனென்றால் குரு தட்சனை இல்லாமல் ஒரு சில வித்தைகள் சித்தியாகாது .அதன் காரணமாகத்தான் வாங்க வேண்டும் .
பூஜை முறை 

  • நாம் வணங்கும், தெய்வம் கிழக்கு நோக்கி வைக்கவேண்டும் 
  • நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும் 
  • குத்துவிளக்கு கன்னி மூலையில் வைக்க வேண்டும் 
  • நாம் இஷ்ட தெய்வமாக வாலை புவனேஸ்வரி தாயை எடுத்து கொள்ள வேண்டும் 
  • வாலை தெய்வத்தின் படம் வாங்கி வைக்க வேண்டும் 
  • அதன் முன் ஒரு பெரிய தம்பாளத்தட்டில் திருநீறு பரப்பி வைத்து கொள்ள வேண்டும் 
  • இன்னொரு தாம்பாளத்தட்டில் குங்குமம் பரப்பி வைக்க வேண்டும் 
  • அதற்கு முன் வாழையிலை போட்டு தாம்பூலம் வைத்து அதன் பிறகு வாழைப்பழம் படைத்து அவள் பொறி கடலை படைத்து பன்னீர் சந்தனம்,சூடம் சாம்பிராணி புகைக்க வேண்டும் 
  • நீங்கள் பூஜை செய்யும் யந்திரத்தை திருநீறு நிரப்பிய தாம்பாளத்தட்டில் வைத்து பூஜை செய்யலாம் 
  •  இந்த முறையின் படி பூஜை துவங்க வேண்டும் இன்னும் பல உள்ளன ஒருவர் வீட்டில் சென்று பூஜை செய்ய என்னென்ன முறைகள் சாந்தி கழிக்க என்னென்ன முறைகள் என்று பல முறைகள் உள்ளன .என்னுடன் இணைந்திருங்கள் நீங்கள் ஒரு சிறந்த மாந்த்ரிகனாக திகழ்ந்து சென்ற இடமெல்லாம் நற்பெயர் ஈட்டலாம் என்பது உறுதி .


ஏனென்றால் இப்போது உண்மையான மாந்திரீகர்கள் என்று சொல்லுமளவிற்கு யாருமே தென்படவில்லை தமிகத்தில் ஆகவே என்னிடம் பயிலும் நீங்களாவது நாலுபேருக்கு நல்லது செய்வீர்கள் என்று நம்புகிறேன் .

நல்ல மாந்திரீகருக்கு மாதம் பல லட்சங்கள் வரை வருமானம் வரும் அவ்வளவு வித்தைகள் உள்ளன .

உங்களுடைய சந்தேகங்களை என்னிடம் கேட்கலாம் .

3 comments:

  1. Ji vanam ji enaku dheivam nammidam sassuruva pesum phen dheiva enaku vasiyam panni tarivinkala tarssana evalau ji

    ReplyDelete
  2. ஓம் குருவடி சரணம்

    ReplyDelete
  3. வணக்கம் சார்

    ReplyDelete