Monday 28 March 2016

வாலை பரமேஸ்வரி யந்திரம் மந்திரம்

LESSON :7

            மாந்திரீக பாடங்களில் முதல் தெய்வமாக சித்தி செய்து கொள்ள வேண்டும் .இந்த வாலை பரமேஸ்வரியால் தான் உங்களது வாழ்வில் ஞான விளக்கேற்ற முடியும் .நீங்கள் இந்த தேவதையை 41விரதமிருந்து சித்தி செய்து கொண்டால் இந்த தெய்வத்தின் மூலமாக அநேக காரியங்கள் சாதிக்கலாம் .இதனால் பல மாந்திரீக உண்மைகள் தெரிய வரும் குறி சொல்லலாம் முக்காலமும் சொல்லும் ஞானம் கிடைக்கும் .ஆலய பிரசன்னம் பார்ப்பவர்கள் இந்த தெய்வம் சொல்வதை கேட்டுதான் சொல்வார்கள் . 

வாலை புவனேஸ்வரி  யந்திரம் 

மூலமந்திரம் 

அரி ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஸ்ரீயும் றீயும்
வா வா வாலை பரமேஸ்வரி வருக வருக 
வந்து என் நாவிலும் வாக்கிலும் வந்து முன் நிற்க சிவா.

பூஜை விதி :

              வளர்பிறை வெள்ளிகிழமை நாளில் யந்திரம் எழுதி பூஜையை துவங்க வேண்டும் .தினம் 108 உரு வீதம் 41 தினங்கள் விரதமிருந்து பூஜை செய்தால் சித்தியாகும் .

       இதனால் சகல காரியங்களையும் சாதிக்கலாம் சாதகனுக்கு தன வசியம் ,ஜனவசியம் அனைத்தும் சித்தியாகும் .

--------------------------------------------------------------------------------

1 comment: