Saturday 28 May 2016

பேய் பிசாசுகளை விரட்ட யந்திரம்


ஒரு தட்டில் விபூதி பரப்பி அதன் மீது மேற்கண்ட சக்கரத்தை எழுத வேண்டும். இதற்கு அன்னம் சுண்டல் தேங்காய் பழம் கற்பூரம் சாம்பிராணிப் புகையுடன் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரித்து அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் விட்டு எரியவிட்டு தெற்கு முகமாய் ஒரு கால் மடக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

மந்திரம், :
ஓம் நமசிவய நமஹ ஓம் ஐயும்
கிலியும் மவ்வும் சவ்வும் சுவாஹா

என 108 முறை ஜெபித்து விபூதியை பேய் பிடித்தவர்க்கு மேல் ஊத பேய் ஆடும். வாய் திறந்து பேசும் கருப்புத் துணி, கோழி முட்டை, எழுமிச்சம் பழம் காவு கொடுத்து பேயை விரட்ட வேண்டும். நீரில் மந்தரித்து முகத்தில் அடிக்கலாம். பிரம்பில் மந்தரித்து தலைமுதல் கால் வரைத் தடவலாம். யந்திரத்தை தகட்டில் எழுதி குளிசமாக் கட்டலாம். 

No comments:

Post a Comment