Showing posts with label குன்றி மணியின் மகத்துவம். Show all posts
Showing posts with label குன்றி மணியின் மகத்துவம். Show all posts

Sunday, 18 December 2016

குன்றிமணியின் மகத்துவம்



கருப்பு சேர்ந்த சிகப்பு குன்றிமணி : எளிதில் விளையக்கூடியது. எனினும் அபார சக்தி கொண்டது. வீட்டில் வைத்தோ அலுவலகத்தில் வைத்தோ தாயத்து கொண்டு அணிந்தோ உபயோகிக்கலாம் பண பிரச்சனைகளை போக்கும்.

கருப்பு குன்றிமணி : ராஜஸ்தான் மாநில காடுகளில் விளையும் இவை மிகுந்த சக்தி கொண்டவை. இதை வைத்திருப்போறுக்கு ஏவல் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஏற்படாது. காளியின் ரூபமாக கருதபடுபவை.பல தாந்த்ரீக பயன்பாட்டிற்கு உபயோகமானவை. தாயத்தில் அணிந்தோ அல்லது பாக்கெட்டில் வைத்தோ இருந்தாலே மிகுந்த பயன் தரும்.கிடைப்பது அரிது.

வெள்ளை குன்றிமணி : அம்பாள் ரூபமாக கருதப்படுபவை. மிகுந்த பண கஷ்டம், தொடர்ந்த பண சரிவு, வியாபாரத்தில் நஷ்டம்,மன அமைதியின்மை, படிப்பில் நாட்டமின்மை போன்றவை இருப்பின் இதன் துணை கொண்டு ஜெயிக்கலாம். அபார சக்தி கொண்டவை.

சுத்த சிகப்பு குன்றி மணி : மனிதர்களின் துர் அதிர்ஷ்டத்தை போக்க வல்லவை. தொடர்ந்து எதிர் மறையாக செயல்படும் மற்றும் சிந்திக்கும் மனிதர்களின் மனதை மாற்ற கூடியவை.

மொத்தம் பன்னிரண்டு விதமான வண்ணங்களில் வளரும் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தாந்த்ரீக பயன்பாட்டிற்கு ஏற்றவை. மற்றும் மனிதர்களின் பல் வேறு பிரச்சனைகளை தீர்க்க வல்லவை.